ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.
ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,
அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.
| And the Lord | וְהִבְדִּיל֤וֹ | wĕhibdîlô | veh-heev-dee-LOH |
| shall separate | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| him unto evil | לְרָעָ֔ה | lĕrāʿâ | leh-ra-AH |
| out of all | מִכֹּ֖ל | mikkōl | mee-KOLE |
| the tribes | שִׁבְטֵ֣י | šibṭê | sheev-TAY |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| according to all | כְּכֹל֙ | kĕkōl | keh-HOLE |
| the curses | אָל֣וֹת | ʾālôt | ah-LOTE |
| of the covenant | הַבְּרִ֔ית | habbĕrît | ha-beh-REET |
| that are written | הַכְּתוּבָ֕ה | hakkĕtûbâ | ha-keh-too-VA |
| in this | בְּסֵ֥פֶר | bĕsēper | beh-SAY-fer |
| book | הַתּוֹרָ֖ה | hattôrâ | ha-toh-RA |
| of the law: | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |