பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
| And now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
| is not | הֲלֹ֥א | hălōʾ | huh-LOH |
| Boaz | בֹ֙עַז֙ | bōʿaz | VOH-AZ |
| of our kindred, | מֹֽדַעְתָּ֔נוּ | mōdaʿtānû | moh-da-TA-noo |
| with | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| whose | הָיִ֖ית | hāyît | ha-YEET |
| maidens | אֶת | ʾet | et |
| thou wast? | נַֽעֲרוֹתָ֑יו | naʿărôtāyw | na-uh-roh-TAV |
| Behold, | הִנֵּה | hinnē | hee-NAY |
| he | ה֗וּא | hûʾ | hoo |
| winnoweth | זֹרֶ֛ה | zōre | zoh-REH |
| barley | אֶת | ʾet | et |
| to night | גֹּ֥רֶן | gōren | ɡOH-ren |
| in | הַשְּׂעֹרִ֖ים | haśśĕʿōrîm | ha-seh-oh-REEM |
| the threshingfloor. | הַלָּֽיְלָה׃ | hallāyĕlâ | ha-LA-yeh-la |