1 ⁽ஆண்டவரே, உமது வல்லமையில்␢ அரசர் பூரிப்படைகின்றார்;␢ நீர் அளித்த வெற்றியில் § எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!⁾

2 ⁽அவர் உள்ளம் விரும்பியதை␢ நீர் அவருக்குத் தந்தருளினீர்;␢ அவர் வாய்விட்டுக் கேட்டதை␢ நீர் மறுக்கவில்லை. (சேலா)⁾

3 ⁽உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி␢ நீர் அவரை எதிர்கொண்டீர்; § அவர் தலையில்␢ பசும்பொன்முடி சூட்டினீர்.⁾

4 ⁽அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்;␢ நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை § அவருக்கு அளித்தீர்.⁾

5 ⁽நீர் அவருக்கு வெற்றியளித்ததால்␢ அவரது மாட்சிமை பெரிதாயிற்று;␢ மேன்மையையும் மாண்பையும்␢ அவருக்கு அருளினீர்,⁾

6 ⁽உண்மையாகவே,␢ எந்நாளும் நிலைத்திருக்கும்␢ ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;␢ உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்␢ கண்டு களிக்கச் செய்தீர்.⁾

7 ⁽ஏனெனில், அரசர் ஆண்டவரில்␢ நம்பிக்கை வைக்கின்றார்;␢ உன்னதரின் பேரன்பினால்␢ அவர் அசைவுறாதிருப்பார்.⁾

8 ⁽உமது கை உம் எதிரிகளையெல்லாம்␢ தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை␢ உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.⁾

9 ⁽நீர் காட்சியளிக்கும்பொழுது,␢ அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;␢ ஆண்டவர் சினங்கொண்டு␢ அவர்களை அழிப்பார்;␢ நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.⁾

10 ⁽அவர்கள் தலைமுறையைப்␢ பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;␢ அவர்கள் வழிமரபை␢ மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.⁾

11 ⁽உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,␢ சதித்திட்டம் தீட்டினாலும்,␢ அவர்களால் வெற்றிபெற இயலாது.⁾

12 ⁽நீரோ அம்புகளை நாணேற்றி␢ அவர்களது முகத்தில் எய்வீர்;␢ அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.⁾

13 ⁽ஆண்டவரே, உமது வலிமையோடு␢ எழுந்து வாரும்;␢ நாங்கள் உமது வல்லமையைப்␢ புகழ்ந்து பாடுவோம்.⁾

Psalm 21 ERV IRV TRV