நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.
விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.
வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.
இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.
கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவர்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.
| And so it was, | וְיֵ֞שׁ | wĕyēš | veh-YAYSH |
| when | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the cloud | יִֽהְיֶ֤ה | yihĕye | yee-heh-YEH |
| abode | הֶֽעָנָן֙ | heʿānān | heh-ah-NAHN |
| from even | מֵעֶ֣רֶב | mēʿereb | may-EH-rev |
| unto | עַד | ʿad | ad |
| the morning, | בֹּ֔קֶר | bōqer | BOH-ker |
| and that the cloud | וְנַֽעֲלָ֧ה | wĕnaʿălâ | veh-na-uh-LA |
| was taken up | הֶֽעָנָ֛ן | heʿānān | heh-ah-NAHN |
| in the morning, | בַּבֹּ֖קֶר | babbōqer | ba-BOH-ker |
| then they journeyed: | וְנָסָ֑עוּ | wĕnāsāʿû | veh-na-SA-oo |
| whether | א֚וֹ | ʾô | oh |
| it was by day | יוֹמָ֣ם | yômām | yoh-MAHM |
| or by night | וָלַ֔יְלָה | wālaylâ | va-LA-la |
| that the cloud | וְנַֽעֲלָ֥ה | wĕnaʿălâ | veh-na-uh-LA |
| was taken up, | הֶֽעָנָ֖ן | heʿānān | heh-ah-NAHN |
| they journeyed. | וְנָסָֽעוּ׃ | wĕnāsāʿû | veh-na-sa-OO |