பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.
அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.
எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூலையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
| being together, gathered | וּ֠מִֽתְכַּנְּשִׁין | ûmitĕkkannĕšîn | OO-mee-teh-ka-neh-sheen |
| the | אֲחַשְׁדַּרְפְּנַיָּ֞א | ʾăḥašdarpĕnayyāʾ | uh-hahsh-dahr-peh-na-YA |
| princes, And | סִגְנַיָּ֣א | signayyāʾ | seeɡ-na-YA |
| governors, captains, and | וּפַחֲוָתָא֮ | ûpaḥăwātāʾ | oo-fa-huh-va-TA |
| counsellers, | וְהַדָּבְרֵ֣י | wĕhaddobrê | veh-ha-dove-RAY |
| the and king's | מַלְכָּא֒ | malkāʾ | mahl-KA |
| saw | חָזַ֣יִן | ḥāzayin | ha-ZA-yeen |
| men, | לְגֻבְרַיָּ֣א | lĕgubrayyāʾ | leh-ɡoov-ra-YA |
| these | אִלֵּ֡ךְ | ʾillēk | ee-LAKE |
| upon whose | דִּי֩ | diy | dee |
| had | לָֽא | lāʾ | la |
| no power, | שְׁלֵ֨ט | šĕlēṭ | sheh-LATE |
| the fire | נוּרָ֜א | nûrāʾ | noo-RA |
| bodies | בְּגֶשְׁמְה֗וֹן | bĕgešmĕhôn | beh-ɡesh-meh-HONE |
| was | וּשְׂעַ֤ר | ûśĕʿar | oo-seh-AR |
| an hair their | רֵֽאשְׁהוֹן֙ | rēʾšĕhôn | ray-sheh-HONE |
| of head nor | לָ֣א | lāʾ | la |
| singed, | הִתְחָרַ֔ךְ | hitḥārak | heet-ha-RAHK |
| coats | וְסַרְבָּלֵיה֖וֹן | wĕsarbālêhôn | veh-sahr-ba-lay-HONE |
| their were neither | לָ֣א | lāʾ | la |
| changed, | שְׁנ֑וֹ | šĕnô | sheh-NOH |
| the | וְרֵ֣יחַ | wĕrêaḥ | veh-RAY-ak |
| smell fire | נ֔וּר | nûr | noor |
| of nor | לָ֥א | lāʾ | la |
| had passed | עֲדָ֖ת | ʿădāt | uh-DAHT |
| on them. | בְּהֽוֹן׃ | bĕhôn | beh-HONE |