Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 65:6 in Tamil

Home Bible Isaiah Isaiah 65 Isaiah 65:6

ஏசாயா 65:6
இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.

Tamil Indian Revised Version
இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் தண்டிப்பேன்.

Tamil Easy Reading Version
“பார்! இங்கே, செலுத்தப்பட வேண்டியவற்றுக்கான பத்திரம் உள்ளது. உங்கள் பாவங்களுக்கு நீர் குற்ற உணர்வுகொள்வதாக இந்தப் பத்திரம் காட்டுகிறது. நான், இந்தப் பத்திரத்திற்குரியதைச் செலுத்தும்வரை அமைதியாக இருக்கமாட்டேன். உன்னைத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பத்திரத்தைச் செலுத்துவேன்.

Thiru Viviliam
⁽அவர்களுக்குரியது என்முன்␢ எழுதப்பட்டாயிற்று;␢ நான் அமைதியாய் இருப்பதில்லை;␢ அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை␢ அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.⁾

Title
இஸ்ரவேல் தண்டிக்கப்படவேண்டும்

Isaiah 65:5Isaiah 65Isaiah 65:7

King James Version (KJV)
Behold, it is written before me: I will not keep silence, but will recompense, even recompense into their bosom,

American Standard Version (ASV)
Behold, it is written before me: I will not keep silence, but will recompense, yea, I will recompense into their bosom,

Bible in Basic English (BBE)
See, it is recorded before me, says the Lord: I will not keep back my hand, till I have sent punishment,

Darby English Bible (DBY)
Behold, it is written before me: I will not keep silence, but will recompense, even recompense into their bosom,

World English Bible (WEB)
Behold, it is written before me: I will not keep silence, but will recompense, yes, I will recompense into their bosom,

Young’s Literal Translation (YLT)
Lo, it is written before Me: `I am not silent, but have recompensed; And I have recompensed into their bosom,

ஏசாயா Isaiah 65:6
இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.
Behold, it is written before me: I will not keep silence, but will recompense, even recompense into their bosom,

הִנֵּ֥הhinnēhee-NAY
כְתוּבָ֖הkĕtûbâheh-too-VA
לְפָנָ֑יlĕpānāyleh-fa-NAI
לֹ֤אlōʾloh
אֶחֱשֶׂה֙ʾeḥĕśeheh-hay-SEH
כִּ֣יkee
אִםʾimeem
שִׁלַּ֔מְתִּיšillamtîshee-LAHM-tee
וְשִׁלַּמְתִּ֖יwĕšillamtîveh-shee-lahm-TEE
עַלʿalal
חֵיקָֽם׃ḥêqāmhay-KAHM

Cross Reference

எரேமியா 16:18
முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைத் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 50:3
நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.

சங்கீதம் 79:12
ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.

ஏசாயா 64:12
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?

ஏசாயா 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

சங்கீதம் 50:21
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:12
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

மல்கியா 3:16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

யோவேல் 3:4
தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வேன்.

எசேக்கியேல் 22:31
ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார்.

எசேக்கியேல் 11:21
ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

சங்கீதம் 56:8
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?

உபாகமம் 32:34
இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?

யாத்திராகமம் 17:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.


Tags இதோ அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்
Isaiah 65:6 in Tamil Concordance Isaiah 65:6 in Tamil Interlinear Isaiah 65:6 in Tamil Image