1 ⁽சீயோன் மகளின் மலையில்␢ நாட்டை ஆள்பவனுக்குச்␢ சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச்␢ செம்மறியாடு அனுப்புங்கள்.⁾

2 ⁽சிறகடித்து அலையும் பறவை போலும்␢ கூடு இழந்த குஞ்சுபோலும்␢ மோவாபிய மகளிர்␢ அர்னோன் துறைகளில் காணப்படுவர்.⁾

3 ⁽வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்;␢ நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்;␢ நண்பகலில் உங்கள் நிழலை␢ இரவு போலாக்கி,␢ விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு␢ மறைத்து வையுங்கள்;␢ தப்பி ஓடுகிறவர்களைக்␢ காட்டிக் கொடுக்காதீர்கள்.⁾

4 ⁽மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள்␢ உங்களிடமே தங்கியிருக்கட்டும்;␢ அழிக்க வருபவனின்␢ பார்வையிலிருந்து தப்ப␢ அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்;␢ ஒடுக்குபவன் ஒழிந்து போவான்;␢ அழிவு ஓய்ந்து போகும்;␢ மிதிக்கிறவர்கள்␢ நாட்டில் இல்லாது போவர்.⁾

5 ⁽அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால்␢ ஓர் அரியணையை அமைப்பார்;␢ அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த␢ ஒருவர் வீற்றிருப்பார்;␢ அவர் உண்மையுடன் ஆள்பவர்;␢ நீதியை நிலைநாட்டுபவர்;␢ நேர்மையானதைச் செய்ய விரைபவர்.⁾

6 ⁽மோவாபின் இறுமாப்பைப்பற்றி␢ நாங்கள் கேள்வியுற்றோம்;␢ அவன் ஆணவம் பெரிதே;␢ அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும்␢ செருக்கையும் குறித்துக்␢ கேள்விப்பட்டோம்.␢ அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.⁾

7 ⁽ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்;␢ மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்;␢ கீர் அரசேத்தின்␢ திராட்சை அடைகளை நினைந்து,␢ நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.⁾

8 ⁽எஸ்போனின் வயல்வெளி நிலங்கள்␢ வாடுகின்றன,␢ மக்களினங்களின் தலைவர்களை␢ விழத் தள்ளிய சிபிமானின்␢ திராட்சைத் தோட்டத்துக் கிளைகள்␢ அழிந்துவிட்டன.␢ அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன;␢ பாலை நிலம்வரை படர்ந்திருந்தன;␢ அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து␢ கடல்கடந்து படர்ந்து சென்றன.⁾

9 ⁽ஆதலால் யாசேருக்காக அழுததுபோல்␢ நான் சிபிமாவின்␢ திராட்சைத் தோட்டத்திற்காகக்␢ கண்ணீர் விடுகின்றேன்;␢ எஸ்போன்! எலயாரே! உங்களை␢ என் கண்ணீரால் நனைக்கின்றேன்;␢ ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும்␢ அறுவடைக்காகவும் எழும்␢ மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.⁾

10 ⁽வளமான வயல் நிலங்களிலிருந்து␢ அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன.␢ திராட்சைத் தோட்டங்களில்␢ பாடல்கள் பாடுவார் யாருமில்லை;␢ ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை.␢ இரசம் எடுப்பதற்கு ஆலையில்␢ திராட்சைக்கனி பிழிவாருமில்லை;␢ பழம் பிழிவாரின் பூரிப்பும்␢ இல்லாதொழிந்தது;⁾

11 ⁽ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும்,␢ கீர்கேரசிற்காக என் இதயமும்␢ வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது;⁾

12 ⁽மோவாபியர் உயரமான␢ தொழுகை மேடுகளில்␢ வழிபாடு செய்து களைத்தும்,␢ திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும்␢ அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.⁾

13 இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.

14 ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர்.

Isaiah 16 ERV IRV TRV