அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.
அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
| And Onan | וַיֵּ֣דַע | wayyēdaʿ | va-YAY-da |
| knew | אוֹנָ֔ן | ʾônān | oh-NAHN |
| that | כִּ֛י | kî | kee |
| the seed | לֹּ֥א | lōʾ | loh |
| should not | ל֖וֹ | lô | loh |
| be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| his; and it came to pass, | הַזָּ֑רַע | hazzāraʿ | ha-ZA-ra |
| when | וְהָיָ֞ה | wĕhāyâ | veh-ha-YA |
| he went in | אִם | ʾim | eem |
| unto | בָּ֨א | bāʾ | ba |
| his brother's | אֶל | ʾel | el |
| wife, | אֵ֤שֶׁת | ʾēšet | A-shet |
| that he spilled | אָחִיו֙ | ʾāḥîw | ah-heeoo |
| it on the ground, | וְשִׁחֵ֣ת | wĕšiḥēt | veh-shee-HATE |
| lest | אַ֔רְצָה | ʾarṣâ | AR-tsa |
| that he should give | לְבִלְתִּ֥י | lĕbiltî | leh-veel-TEE |
| seed | נְתָן | nĕtān | neh-TAHN |
| to his brother. | זֶ֖רַע | zeraʿ | ZEH-ra |
| לְאָחִֽיו׃ | lĕʾāḥîw | leh-ah-HEEV |