தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
| And the name | וְשֵֽׁם | wĕšēm | veh-SHAME |
| of the second | הַנָּהָ֥ר | hannāhār | ha-na-HAHR |
| river | הַשֵּׁנִ֖י | haššēnî | ha-shay-NEE |
| is Gihon: | גִּיח֑וֹן | gîḥôn | ɡee-HONE |
| the same | ה֣וּא | hûʾ | hoo |
| is it that compasseth | הַסּוֹבֵ֔ב | hassôbēb | ha-soh-VAVE |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the whole | כָּל | kāl | kahl |
| land | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| of Ethiopia. | כּֽוּשׁ׃ | kûš | koosh |