இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.
சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின.
| And, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| came unto | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| him, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| This | לֹ֥א | lōʾ | loh |
| shall not | יִֽירָשְׁךָ֖ | yîroškā | yee-rohsh-HA |
| be thine heir; | זֶ֑ה | ze | zeh |
| but | כִּי | kî | kee |
| אִם֙ | ʾim | eem | |
| he that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| shall come forth | יֵצֵ֣א | yēṣēʾ | yay-TSAY |
| out of thine own bowels | מִמֵּעֶ֔יךָ | mimmēʿêkā | mee-may-A-ha |
| shall be thine heir. | ה֖וּא | hûʾ | hoo |
| יִֽירָשֶֽׁךָ׃ | yîrāšekā | YEE-ra-SHEH-ha |