Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 11:5 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 11 Ecclesiastes 11:5

பிரசங்கி 11:5
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

Tamil Indian Revised Version
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை.

Tamil Easy Reading Version
காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

Thiru Viviliam
காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது; அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது.

Ecclesiastes 11:4Ecclesiastes 11Ecclesiastes 11:6

King James Version (KJV)
As thou knowest not what is the way of the spirit, nor how the bones do grow in the womb of her that is with child: even so thou knowest not the works of God who maketh all.

American Standard Version (ASV)
As thou knowest not what is the way of the wind, `nor’ how the bones `do grow’ in the womb of her that is with child; even so thou knowest not the work of God who doeth all.

Bible in Basic English (BBE)
As you have no knowledge of the way of the wind, or of the growth of the bones in the body of her who is with child, even so you have no knowledge of the works of God who has made all.

Darby English Bible (DBY)
As thou knowest not what is the way of the spirit, how the bones [grow] in the womb of her that is with child, even so thou knowest not the work of God who maketh all.

World English Bible (WEB)
As you don’t know what is the way of the wind, Nor how the bones grow in the womb of her who is with child; Even so you don’t know the work of God who does all.

Young’s Literal Translation (YLT)
As thou knowest not what `is’ the way of the spirit, How — bones in the womb of the full one, So thou knowest not the work of God who maketh the whole.

பிரசங்கி Ecclesiastes 11:5
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
As thou knowest not what is the way of the spirit, nor how the bones do grow in the womb of her that is with child: even so thou knowest not the works of God who maketh all.

כַּאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
אֵֽינְךָ֤ʾênĕkāay-neh-HA
יוֹדֵ֙עַ֙yôdēʿayoh-DAY-AH
מַהmama
דֶּ֣רֶךְderekDEH-rek
הָר֔וּחַhārûaḥha-ROO-ak
כַּעֲצָמִ֖יםkaʿăṣāmîmka-uh-tsa-MEEM
בְּבֶ֣טֶןbĕbeṭenbeh-VEH-ten
הַמְּלֵאָ֑הhammĕlēʾâha-meh-lay-AH
כָּ֗כָהkākâKA-ha
לֹ֤אlōʾloh
תֵדַע֙tēdaʿtay-DA
אֶתʾetet
מַעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יַעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
אֶתʾetet
הַכֹּֽל׃hakkōlha-KOLE

Cross Reference

யோவான் 3:8
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

பிரசங்கி 8:17
தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

சங்கீதம் 92:5
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

ஏசாயா 40:28
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையே. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.

பிரசங்கி 7:24
தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?

சங்கீதம் 139:13
நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

சங்கீதம் 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

யோபு 38:4
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

யோபு 37:23
சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

யோபு 36:24
மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியை நீர் மகிமைப்படுத்த நினையும்.

யோபு 26:5
ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.

யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.


Tags ஆவியின் வழி இன்னதென்றும் கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்
Ecclesiastes 11:5 in Tamil Concordance Ecclesiastes 11:5 in Tamil Interlinear Ecclesiastes 11:5 in Tamil Image