நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:
அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.
பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.
| And it shall be, | וְהָיָ֛ה | wĕhāyâ | veh-ha-YA |
| when the officers | כְּכַלֹּ֥ת | kĕkallōt | keh-ha-LOTE |
| have made an end | הַשֹּֽׁטְרִ֖ים | haššōṭĕrîm | ha-shoh-teh-REEM |
| of speaking | לְדַבֵּ֣ר | lĕdabbēr | leh-da-BARE |
| unto | אֶל | ʾel | el |
| the people, | הָעָ֑ם | hāʿām | ha-AM |
| that they shall make | וּפָֽקְד֛וּ | ûpāqĕdû | oo-fa-keh-DOO |
| captains | שָׂרֵ֥י | śārê | sa-RAY |
| of the armies | צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| to lead | בְּרֹ֥אשׁ | bĕrōš | beh-ROHSH |
| the people. | הָעָֽם׃ | hāʿām | ha-AM |