ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.
ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோனின் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:
நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.
அவன் உரத்த சத்தமிட்டு; இந்தவிருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்.
ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.
அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்.
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.
நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.
ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின் ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
| And whereas | וְדִ֣י | wĕdî | veh-DEE |
| the king | חֲזָ֣ה | ḥăzâ | huh-ZA |
| saw | מַלְכָּ֡א | malkāʾ | mahl-KA |
| a watcher | עִ֣יר | ʿîr | eer |
| and an holy one | וְקַדִּ֣ישׁ | wĕqaddîš | veh-ka-DEESH |
| coming down | נָחִ֣ת׀ | nāḥit | na-HEET |
| from | מִן | min | meen |
| heaven, | שְׁמַיָּ֡א | šĕmayyāʾ | sheh-ma-YA |
| and saying, | וְאָמַר֩ | wĕʾāmar | veh-ah-MAHR |
| Hew | גֹּ֨דּוּ | gōddû | ɡOH-doo |
| the tree | אִֽילָנָ֜א | ʾîlānāʾ | ee-la-NA |
| down, and destroy | וְחַבְּל֗וּהִי | wĕḥabbĕlûhî | veh-ha-beh-LOO-hee |
| it; yet | בְּרַ֨ם | bĕram | beh-RAHM |
| leave | עִקַּ֤ר | ʿiqqar | ee-KAHR |
| the stump | שָׁרְשׁ֙וֹהִי֙ | šoršôhiy | shore-SHOH-HEE |
| of the roots | בְּאַרְעָ֣א | bĕʾarʿāʾ | beh-ar-AH |
| thereof in the earth, | שְׁבֻ֔קוּ | šĕbuqû | sheh-VOO-koo |
| even with a band | וּבֶאֱסוּר֙ | ûbeʾĕsûr | oo-veh-ay-SOOR |
| of | דִּֽי | dî | dee |
| iron | פַרְזֶ֣ל | parzel | fahr-ZEL |
| and brass, | וּנְחָ֔שׁ | ûnĕḥāš | oo-neh-HAHSH |
| in the tender grass | בְּדִתְאָ֖א | bĕditʾāʾ | beh-deet-AH |
| of | דִּ֣י | dî | dee |
| the field; | בָרָ֑א | bārāʾ | va-RA |
| and let it be wet | וּבְטַ֧ל | ûbĕṭal | oo-veh-TAHL |
| with the dew | שְׁמַיָּ֣א | šĕmayyāʾ | sheh-ma-YA |
| of heaven, | יִצְטַבַּ֗ע | yiṣṭabbaʿ | yeets-ta-BA |
| and let his portion | וְעִם | wĕʿim | veh-EEM |
| be with | חֵיוַ֤ת | ḥêwat | have-AT |
| the beasts | בָּרָא֙ | bārāʾ | ba-RA |
| of the field, | חֲלָקֵ֔הּ | ḥălāqēh | huh-la-KAY |
| till | עַ֛ד | ʿad | ad |
| דִּֽי | dî | dee | |
| seven | שִׁבְעָ֥ה | šibʿâ | sheev-AH |
| times | עִדָּנִ֖ין | ʿiddānîn | ee-da-NEEN |
| pass | יַחְלְפ֥וּן | yaḥlĕpûn | yahk-leh-FOON |
| over | עֲלֽוֹהִי׃ | ʿălôhî | uh-LOH-hee |