ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.
அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
| Then | אֱדַ֙יִן֙ | ʾĕdayin | ay-DA-YEEN |
| Nebuchadnezzar | נְבוּכַדְנֶצַּ֣ר | nĕbûkadneṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| the king | מַלְכָּ֔א | malkāʾ | mahl-KA |
| was astonied, | תְּוַ֖הּ | tĕwah | teh-VA |
| and rose up | וְקָ֣ם | wĕqām | veh-KAHM |
| in haste, | בְּהִתְבְּהָלָ֑ה | bĕhitbĕhālâ | beh-heet-beh-ha-LA |
| and spake, | עָנֵ֨ה | ʿānē | ah-NAY |
| and said | וְאָמַ֜ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| unto his counsellers, | לְהַדָּֽבְר֗וֹהִי | lĕhaddābĕrôhî | leh-ha-da-veh-ROH-hee |
| Did not | הֲלָא֩ | hălāʾ | huh-LA |
| we cast | גֻבְרִ֨ין | gubrîn | ɡoov-REEN |
| three | תְּלָתָ֜ה | tĕlātâ | teh-la-TA |
| men | רְמֵ֤ינָא | rĕmênāʾ | reh-MAY-na |
| bound | לְגוֹא | lĕgôʾ | leh-ɡOH |
| into the midst | נוּרָא֙ | nûrāʾ | noo-RA |
| of the fire? | מְכַפְּתִ֔ין | mĕkappĕtîn | meh-ha-peh-TEEN |
| They answered | עָנַ֤יִן | ʿānayin | ah-NA-yeen |
| and said | וְאָמְרִין֙ | wĕʾomrîn | veh-ome-REEN |
| unto the king, | לְמַלְכָּ֔א | lĕmalkāʾ | leh-mahl-KA |
| True, | יַצִּיבָ֖א | yaṣṣîbāʾ | ya-tsee-VA |
| O king. | מַלְכָּֽא׃ | malkāʾ | mahl-KA |