அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.
தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.
பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
| Thus Melzar | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| took away | הַמֶּלְצַ֗ר | hammelṣar | ha-mel-TSAHR |
| נֹשֵׂא֙ | nōśēʾ | noh-SAY | |
| the portion of their meat, | אֶת | ʾet | et |
| and the wine | פַּתְבָּגָ֔ם | patbāgām | paht-ba-ɡAHM |
| that they should drink; | וְיֵ֖ין | wĕyên | veh-YANE |
| and gave | מִשְׁתֵּיהֶ֑ם | mištêhem | meesh-tay-HEM |
| them pulse. | וְנֹתֵ֥ן | wĕnōtēn | veh-noh-TANE |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| זֵרְעֹנִֽים׃ | zērĕʿōnîm | zay-reh-oh-NEEM |