அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
| And the earth | וְהָאָ֗רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| was | הָיְתָ֥ה | hāytâ | hai-TA |
| without form, | תֹ֙הוּ֙ | tōhû | TOH-HOO |
| and void; | וָבֹ֔הוּ | wābōhû | va-VOH-hoo |
| and darkness | וְחֹ֖שֶׁךְ | wĕḥōšek | veh-HOH-shek |
| was upon | עַל | ʿal | al |
| the face | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| of the deep. | תְה֑וֹם | tĕhôm | teh-HOME |
| And the Spirit | וְר֣וּחַ | wĕrûaḥ | veh-ROO-ak |
| of God | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| moved | מְרַחֶ֖פֶת | mĕraḥepet | meh-ra-HEH-fet |
| upon | עַל | ʿal | al |
| the face | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| of the waters. | הַמָּֽיִם׃ | hammāyim | ha-MA-yeem |