1 நினிவேயைக் குறித்த இறைவாக்கு; எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல்.

2 ⁽ஆண்டவர்␢ அநீதியைப் பொறாத இறைவன்;␢ பழிவாங்குபவர்;␢ ஆண்டவர் பழிவாங்குபவர்;␢ வெகுண்டெழுபவர்;␢ தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்;␢ தம் பகைவர்மீது சினம் கொள்பவர்.⁾

3 ⁽ஆண்டவர் விரைவில்␢ சினம் கொள்ளார்;␢ ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர்.␢ அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும்␢ பழிவாங்காமல் விடமாட்டார்.␢ சுழற்காற்றிலும் புயற்காற்றிலும்␢ அமைந்துள்ளது அவர் வழி;␢ மேகங்கள் அவர்தம்␢ காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்!⁾

4 ⁽அவர் கடலை அதட்டி␢ வற்றச் செய்கின்றார்;␢ ஆறுகளையெல்லாம்␢ வற்றிப்போகச் செய்கின்றார்;␢ பாசானும் கர்மேலும்␢ காய்ந்து போகின்றன;␢ லெபனோனின் மலர்கள்␢ வாடிப்போகின்றன.⁾

5 ⁽அவர் முன்னிலையில்␢ மலைகள் அதிர்கின்றன;␢ குன்றுகள் கரைகின்றன;␢ நிலமும் உலகும்␢ அதில் குடியிருக்கும் அனைத்தும்␢ அவர் முன்னிலையில்␢ நடுநடுங்கின்றன.⁾

6 ⁽அவரது கடும் சினத்தை␢ எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்?␢ அவர் கோபத்தீயின் முன்␢ நிற்பவன் யார்?␢ தீயைப்போல் அவரது கோபம்␢ கொட்டுகின்றது;␢ பாறைகளும் அவர்முன்␢ தவிடு பொடியாகின்றன.⁾

7 ⁽ஆண்டவர் நல்லவர்;␢ துன்பநாளில் அவர்␢ காவலரண் ஆவார்;␢ அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை␢ அவர் அறிவார்.⁾

8 ⁽தம் எதிரிகளைப்␢ பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே␢ முற்றிலும் அழித்திடுவார்;␢ தம் பகைவர்களை␢ இருளுக்குள் விரட்டியடிப்பார்.⁾

9 ⁽ஆண்டவரைப்பற்றி␢ நீங்கள் நினைப்பது என்ன?␢ அவர் முற்றிலும் அழித்துவிடுவார்;␢ தீமை மீண்டும் தலைதூக்காது.⁾

10 ⁽குடிவெறியில்␢ மயங்கிக் கிடக்கும் அவர்கள்␢ பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும்␢ காய்ந்த சருகுபோலும்␢ முற்றிலும் எரிந்துபோவார்கள்.⁾

11 ⁽ஆண்டவருக்கு எதிராய்த்␢ திட்டம் தீட்டித்␢ தீய ஆலோசனைகளைக் கூறுபவன்␢ உன்னிடமிருந்து தோன்றினான்.⁾

12 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “அவர்கள் வல்லவர்களாயினும்␢ பெரும் தொகையினராயினும்␢ வெட்டி வீழ்த்தப்பட்டு␢ அழிந்துவிடுவார்கள்;␢ உன்னை நான் இதுவரை␢ துன்புறுத்தியிருந்தாலும்␢ இனிமேல் உன்னைத்␢ துன்புறுத்தமாட்டேன்.⁾

13 ⁽இப்பொழுதே,␢ உன்மேல் இருக்கும்␢ அவன் நுகத்தை முறித்து␢ உன் கட்டுகளை நான்␢ அறுத்துவிடுவேன்.”⁾

14 ⁽ஆண்டவர் உன்னைப்பற்றி␢ இட்ட தீர்ப்பு இதுவே:␢ “உன் பெயரைத்தாங்கும்␢ வழிமரபே இல்லாமல் போகும்;␢ உன் தெய்வங்களின்␢ கோவிலில் உள்ள␢ செதுக்கிய சிலைகளையும்␢ வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன்.␢ நானே உனக்கு அங்குப்␢ புதை குழி வெட்டுவேன்;␢ ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.⁾

15 ⁽“வெற்றி! வெற்றி!” என்று முழங்கி␢ நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள்␢ மலைகளின்மேல் தென்படுகின்றன!␢ யூதாவே, உன் திருவிழாக்களைக்␢ கொண்டாடு!␢ உன் பொருத்தனைகளை␢ நிறைவேற்று!␢ ஏனெனில், தீயவன் உன் நடுவில்␢ இனி வரவே மாட்டான்;␢ அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.⁾

நாகூம் 1 ERV IRV TRV