Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 45:12 in Tamil

Home Bible Psalm Psalm 45 Psalm 45:12

சங்கீதம் 45:12
தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.

Tamil Indian Revised Version
தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள்.

Tamil Easy Reading Version
தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள். அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.

Thiru Viviliam
⁽தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;␢ செல்வமிகு சீமான்கள்␢ உன்னருள் வேண்டி நிற்பர்.⁾

Psalm 45:11Psalm 45Psalm 45:13

King James Version (KJV)
And the daughter of Tyre shall be there with a gift; even the rich among the people shall intreat thy favour.

American Standard Version (ASV)
And the daughter of Tyre `shall be there’ with a gift; The rich among the people shall entreat thy favor.

Bible in Basic English (BBE)
And the daughters of Tyre will be there with an offering; those who have wealth among the people will be looking for your approval.

Darby English Bible (DBY)
And the daughter of Tyre with a gift, the rich ones among the people, shall court thy favour.

Webster’s Bible (WBT)
So shall the king greatly desire thy beauty: for he is thy lord; and worship thou him.

World English Bible (WEB)
The daughter of Tyre comes with a gift. The rich among the people entreat your favor.

Young’s Literal Translation (YLT)
And the daughter of Tyre with a present, The rich of the people do appease thy face.

சங்கீதம் Psalm 45:12
தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
And the daughter of Tyre shall be there with a gift; even the rich among the people shall intreat thy favour.

וּבַֽתûbatoo-VAHT
צֹ֨ר׀ṣōrtsore
בְּ֭מִנְחָהbĕminḥâBEH-meen-ha
פָּנַ֥יִךְpānayikpa-NA-yeek
יְחַלּ֗וּyĕḥallûyeh-HA-loo
עֲשִׁ֣ירֵיʿăšîrêuh-SHEE-ray
עָֽם׃ʿāmam

Cross Reference

சங்கீதம் 22:29
பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.

ஏசாயா 49:23
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;

சங்கீதம் 72:10
தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

மத்தேயு 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

ஏசாயா 60:10
அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.

ஏசாயா 60:6
ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.

ஏசாயா 60:3
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

ஏசாயா 23:17
எழுபது வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் பணையத்துக்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம் பண்ணும்.

சங்கீதம் 68:29
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:3
சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.


Tags தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள் ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்
Psalm 45:12 in Tamil Concordance Psalm 45:12 in Tamil Interlinear Psalm 45:12 in Tamil Image