Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 28:1 in Tamil

Home Bible Psalm Psalm 28 Psalm 28:1

சங்கீதம் 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என் பாறை. உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும். உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, உம்மை நோக்கி␢ மன்றாடுகின்றேன்;␢ என் கற்பாறையே, என் குரலைக்␢ கேளாதவர்போல் இராதேயும்;␢ நீர் மௌனமாய் இருப்பீராகில்,␢ படுகுழியில் இறங்குவோருள்␢ நானும் ஒருவனாகிவிடுவேன்.⁾

Title
தாவீதின் ஒரு பாடல்

Other Title
உதவிக்காக மன்றாடல்§(தாவீதுக்கு உரியது)

Psalm 28Psalm 28:2

King James Version (KJV)
Unto thee will I cry, O LORD my rock; be not silent to me: lest, if thou be silent to me, I become like them that go down into the pit.

American Standard Version (ASV)
Unto thee, O Jehovah, will I call: My rock, be not thou deaf unto me; Lest, if thou be silent unto me, I become like them that go down into the pit.

Bible in Basic English (BBE)
<Of David.> My cry goes up to you, O Lord, my Rock; do not keep back your answer from me, so that I may not become like those who go down into the underworld.

Darby English Bible (DBY)
{[A Psalm] of David.} Unto thee, Jehovah, do I call; my rock, be not silent unto me, lest, [if] thou keep silence toward me, I become like them that go down into the pit.

Webster’s Bible (WBT)
A Psalm of David. To thee will I cry, O LORD my rock; be not silent to me: lest, if thou shouldst be silent to me, I should become like them that go down into the pit.

World English Bible (WEB)
> To you, Yahweh, I call. My rock, don’t be deaf to me; Lest, if you are silent to me, I would become like those who go down into the pit.

Young’s Literal Translation (YLT)
By David. Unto Thee, O Jehovah, I call, My rock, be not silent to me! Lest Thou be silent to me, And I have been compared With those going down to the pit.

சங்கீதம் Psalm 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Unto thee will I cry, O LORD my rock; be not silent to me: lest, if thou be silent to me, I become like them that go down into the pit.

אֵ֘לֶ֤יךָʾēlêkāA-LAY-ha
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
אֶקְרָ֗אʾeqrāʾek-RA
צוּרִי֮ṣûriytsoo-REE
אַֽלʾalal
תֶּחֱרַ֪שׁteḥĕrašteh-hay-RAHSH
מִ֫מֶּ֥נִּיmimmennîMEE-MEH-nee
פֶּןpenpen
תֶּֽחֱשֶׁ֥הteḥĕšeteh-hay-SHEH
מִמֶּ֑נִּיmimmennîmee-MEH-nee
וְ֝נִמְשַׁ֗לְתִּיwĕnimšaltîVEH-neem-SHAHL-tee
עִםʿimeem
י֥וֹרְדֵיyôrĕdêYOH-reh-day
בֽוֹר׃bôrvore

Cross Reference

சங்கீதம் 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

நீதிமொழிகள் 1:12
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

சங்கீதம் 88:4
நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.

சங்கீதம் 35:22
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:3
அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

ஏசாயா 38:18
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.

ஏசாயா 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

சங்கீதம் 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

சங்கீதம் 77:1
நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

சங்கீதம் 69:15
ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.

சங்கீதம் 42:9
நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

சங்கீதம் 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

சங்கீதம் 30:9
கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

சங்கீதம் 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

சங்கீதம் 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

சங்கீதம் 3:4
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

யோபு 33:28
என் ஆத்துமா படுகுழியிலில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.


Tags என் கன்மலையாகிய கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும் நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்
Psalm 28:1 in Tamil Concordance Psalm 28:1 in Tamil Interlinear Psalm 28:1 in Tamil Image