1 ⁽“ஆண்டவரது இல்லத்திற்குப்␢ போவோம்”, என்ற அழைப்பை␢ நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.⁾

2 ⁽எருசலேமே! இதோ,␢ நாங்கள் அடியெடுத்து வைத்து␢ உன் வாயில்களில் நிற்கின்றோம்.⁾

3 ⁽எருசலேம் செம்மையாக␢ ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.⁾

4 ⁽ஆண்டவரின் திருக்குலத்தார்␢ அங்கே செல்கின்றனர்;␢ இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட␢ கட்டளைக்களுக்கிணங்க␢ ஆண்டவரது பெயருக்கு அவர்கள்␢ நன்றி செலுத்தச் செல்வார்கள்.⁾

5 ⁽அங்கே நீதி வழங்க␢ அரியணைகள் இருக்கின்றன.␢ அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.⁾

6 ⁽எருசலேமில்␢ சமாதானம் நிலைத்திருக்கும்படி␢ வேண்டிக்கொள்ளுங்கள்;␢ “உன்னை விரும்புவோர்␢ வளமுடன் வாழ்வார்களாக!⁾

7 ⁽உன் கோட்டைகளுக்குள்␢ அமைதி நிலவுவதாக!␢ உம் மாளிகைகளில்␢ நல்வாழ்வு இருப்பதாக!⁾

8 ⁽உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று␢ நான் என் சகோதரர் சார்பிலும்␢ என் நண்பர் சார்பிலும்␢ உன்னை வாழ்த்துகின்றேன்.⁾

9 ⁽நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்␢ இங்கே இருப்பதால், உன்னில்␢ நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.⁾