1 ⁽ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:␢ நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில்␢ உன் வழக்கைச் சொல்;␢ குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.⁾

2 ⁽மலைகளே, மண்ணுலகின்␢ நிலையான அடித்தளங்களே,␢ ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்;␢ ஆண்டவருக்குத் தம் மக்களோடு␢ வழக்கு ஒன்று உண்டு;␢ இஸ்ரயேலோடு அவர்␢ வாதாடப் போகின்றார்.⁾

3 ⁽என் மக்களே,␢ நான் உங்களுக்கு என்ன செய்தேன்?␢ எதில் நான் உங்களைத்␢ துயரடையச் செய்தேன்?␢ எனக்கு மறுமொழி கூறுங்கள்.⁾

4 ⁽நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து␢ அழைத்து வந்தேன்;␢ அடிமைத்தன வீட்டிலிருந்து␢ மீட்டு வந்தேன்;␢ உங்களுக்கு முன்பாக␢ மோசேயையும், ஆரோனையும்,␢ மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.⁾

5 ⁽என் மக்களே, மோவாபு அரசன்␢ பாலாக்கு வகுத்த திட்டத்தை␢ நினைத்துப் பாருங்கள்;␢ பெயோரின் மகன் பிலயாம்␢ அவனுக்குக் கூறிய மறுமொழியையும்,␢ சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே␢ நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்;␢ அப்போது ஆண்டவரின்␢ மீட்புச் செயல்களை␢ அறிந்து கொள்வீர்கள்.⁾

6 ⁽ஆண்டவரின் திருமுன் வரும்போது␢ உன்னதரான கடவுளாகிய அவருக்கு␢ எதைக் கொண்டுவந்து␢ பணிந்து நிற்பேன்?␢ எரிபலிகளோடும்␢ ஒரு வயதுக் கன்றுகளோடும்␢ அவர் முன்னிலையில் வரவேண்டுமா?⁾

7 ⁽ஆயிரக்கணக்கான␢ ஆட்டுக்கிடாய்கள் மேலும்␢ பல்லாயிரக்கணக்கான␢ ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும்␢ எண்ணெய் மேலும்␢ ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?␢ என் குற்றத்தை அகற்ற␢ என் தலைப்பிள்ளையையும்,␢ என் பாவத்தைப் போக்க␢ நான் பெற்ற குழந்தையையும்␢ பலி கொடுக்க வேண்டுமா?⁾

8 ⁽ஓ மானிடா, நல்லது எது என␢ அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!␢ நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,␢ இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்␢ உன் கடவுளுக்கு முன்பாக␢ தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர␢ வேறு எதை ஆண்டவர்␢ உன்னிடம் கேட்கின்றார்?⁾

9 ⁽ஆண்டவரின் குரல்␢ நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது;␢ உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே␢ உண்மையான ஞானம்.␢ நகரில் கூடியிருப்போரே!␢ நான் கூறுவதைக் கேளுங்கள்;⁾

10 ⁽“கொடியோரின் வீட்டில்␢ தீய வழியால் சேர்க்கப்பட்ட␢ களஞ்சியங்களையும்␢ சபிக்கப்பட்ட மரக்காலையும்␢ நான் மறப்பேனோ?⁾

11 ⁽கள்ளத் தராசையும்␢ கள்ள எடைக் கற்களையும் கொண்ட␢ பையை வைத்திருப்போரை␢ நேர்மையாளர் எனக் கொள்வேனோ?⁾

12 ⁽உங்களிடையே உள்ள செல்வர்கள்␢ கொடுமை நிறைந்தவர்கள்;␢ அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்;␢ அவர்கள் வாயிலிருந்து␢ வஞ்சனையான பேச்சே␢ வெளிப்படுகின்றது.⁾

13 ⁽ஆதலால், நான் உங்களை␢ உங்கள் பாவங்களுக்காகத்␢ தண்டிக்கத்தொடங்கியுள்ளேன்;␢ நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.⁾

14 ⁽நீங்கள் உணவருந்தினாலும்␢ நிறைவடைய மாட்டீர்கள்;␢ பசி உங்கள் வயிற்றைக்␢ கிள்ளிக்கொண்டிருக்கும்;␢ நீங்கள் எதையும்␢ பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள்,␢ இழப்பீர்கள்;␢ அப்படியே நீங்கள் எதையாவது␢ பாதுகாப்பாக வைத்தாலும்␢ அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.⁾

15 ⁽நீங்கள் விதைப்பீர்கள்;␢ ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்;␢ ஒலிவக் கொட்டைகளை␢ ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள்,␢ ஆனால், உங்களுக்கு எண்ணெய்␢ தடவிக்கொள்ளமாட்டீர்கள்;␢ திராட்சைப் பழம் பிழிவீர்கள்;␢ ஆனால், திராட்சை இரசத்தைச்␢ சுவைக்கமாட்டீர்கள்.⁾

16 ⁽ஏனெனில், நீங்கள்␢ ஒம்ரியின் கட்டளைகளைக்␢ கடைப்பிடித்தீர்கள்;␢ ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள்␢ அனைத்தையும் பின்பற்றினீர்கள்,␢ அவர்களின் திட்டங்களைப்␢ பின்பற்றி நடந்தீர்கள்;␢ ஆதலால், நான் உங்களை␢ அழிவுக்குக் கையளிப்பேன்;␢ உங்களிடையே குடியிருப்போர்␢ இகழ்ச்சிக்கு உள்ளாவர்;␢ மக்களினங்களின்␢ நிந்தைக்கு ஆளாவீர்கள்.⁾

Micah 6 ERV IRV TRV