இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.
ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,
தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
அவன் பாவநிவாரண பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,
அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| any | נֶ֧פֶשׁ | nepeš | NEH-fesh |
| one | אַחַ֛ת | ʾaḥat | ah-HAHT |
| of the common | תֶּֽחֱטָ֥א | teḥĕṭāʾ | teh-hay-TA |
| people | בִשְׁגָגָ֖ה | bišgāgâ | veesh-ɡa-ɡA |
| sin | מֵעַ֣ם | mēʿam | may-AM |
| through ignorance, | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| while he doeth | בַּֽ֠עֲשֹׂתָהּ | baʿăśōtoh | BA-uh-soh-toh |
| somewhat against any | אַחַ֨ת | ʾaḥat | ah-HAHT |
| of the commandments | מִמִּצְוֹ֧ת | mimmiṣwōt | mee-mee-ts-OTE |
| of the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| concerning things which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| ought not | לֹֽא | lōʾ | loh |
| to be done, | תֵעָשֶׂ֖ינָה | tēʿāśênâ | tay-ah-SAY-na |
| and be guilty; | וְאָשֵֽׁם׃ | wĕʾāšēm | veh-ah-SHAME |