அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.
அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.
அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.
கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.
சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.
அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்;
பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.
| Then Jael | וַתִּקַּ֣ח | wattiqqaḥ | va-tee-KAHK |
| Heber's | יָעֵ֣ל | yāʿēl | ya-ALE |
| wife | אֵֽשֶׁת | ʾēšet | A-shet |
| took | חֶ֠בֶר | ḥeber | HEH-ver |
| אֶת | ʾet | et | |
| a nail | יְתַ֨ד | yĕtad | yeh-TAHD |
| of the tent, | הָאֹ֜הֶל | hāʾōhel | ha-OH-hel |
| and took | וַתָּ֧שֶׂם | wattāśem | va-TA-sem |
| אֶת | ʾet | et | |
| an hammer | הַמַּקֶּ֣בֶת | hammaqqebet | ha-ma-KEH-vet |
| in her hand, | בְּיָדָ֗הּ | bĕyādāh | beh-ya-DA |
| and went | וַתָּב֤וֹא | wattābôʾ | va-ta-VOH |
| softly | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| unto | בַּלָּ֔אט | ballāṭ | ba-LAHT |
| him, and smote | וַתִּתְקַ֤ע | wattitqaʿ | va-teet-KA |
| אֶת | ʾet | et | |
| the nail | הַיָּתֵד֙ | hayyātēd | ha-ya-TADE |
| into his temples, | בְּרַקָּת֔וֹ | bĕraqqātô | beh-ra-ka-TOH |
| and fastened | וַתִּצְנַ֖ח | wattiṣnaḥ | va-teets-NAHK |
| it into the ground: | בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| for he | וְהֽוּא | wĕhûʾ | veh-HOO |
| was fast asleep | נִרְדָּ֥ם | nirdām | neer-DAHM |
| and weary. | וַיָּ֖עַף | wayyāʿap | va-YA-af |
| So he died. | וַיָּמֹֽת׃ | wayyāmōt | va-ya-MOTE |