1 ⁽இஸ்ரயேலே! நீ களிப்புறாதே; மற்ற␢ மக்களைப்போல் நீ அக்களிக்காதே.␢ உன் கடவுளைக் கைவிட்டு␢ நீ வேசித் தொழில் புரிந்தாய்;␢ கதிரடிக்கும் களமெல்லாம் நீ␢ விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.⁾

2 ⁽கதிரடிக்கும் களமும்,␢ திராட்சைக் கனி பிழியும் ஆலையும்␢ அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா;␢ புதிய திராட்சை இரசமும்␢ இல்லாமல் போகும்.⁾

3 ⁽ஆண்டவரின் நாட்டில்␢ அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்;␢ எப்ராயிம் எகிப்துக்குத்␢ திரும்பிப் போவான்;␢ அவர்கள் அசீரியாவில்␢ தீட்டுப்பட்டதை உண்பார்கள்.⁾

4 ⁽திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு␢ நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்;␢ அவர்களின் பலிகள்␢ அவருக்கு உகந்தவை ஆகமாட்டா;␢ அவை அவர்களுக்கு␢ இழவு வீட்டு உணவு போலிருக்கும்;␢ அவற்றை உண்பவர் யாவரும்␢ தீட்டுப்படுவர்;␢ ஏனெனில், அவை அவர்களின்␢ பசி தீர்க்கும் உணவே ஆகும்.␢ ஆண்டவரின் கோவிலில்␢ அவை படைக்கப்படுவதில்லை.⁾

5 ⁽விழா நாள்களில்␢ அவர்கள் என்ன செய்கின்றார்கள்?␢ ஆண்டவரின் திருநாளன்று␢ அவர்கள் செய்வதென்ன?⁾

6 ⁽அவர்கள் அழிவுக்குத்␢ தப்பி ஓடுவார்கள்;␢ எகிப்து அவர்களைச்␢ சேர்த்துக் கொள்ளும்;␢ மெம்பிசில் அவர்கள்␢ அடக்கம் செய்யப்படுவார்கள்.␢ அவர்கள் விரும்பி வைத்திருந்த␢ வெள்ளியால் செய்த␢ அரிய பொருள்கள்␢ காஞ்சொறிச் செடிகளுக்கு␢ உரிமைச் சொத்தாகும்.␢ அவர்களின் கூடாரங்களில்␢ முட்புதர்கள் வளரும்.⁾

7 ⁽தண்டனைத் தீர்ப்புப் பெறும்␢ நாள்கள் வந்துவிட்டன;␢ பதிலடி கிடைக்கும்␢ நாள்கள் வந்துவிட்டன;␢ இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர்.␢ உன் தீச்செயலின் மிகுதியாலும்,␢ பெரும் பகையுணர்ச்சியாலும்␢ ‘இறைவாக்கினன்␢ மூடனாய் இருக்கிறான்;␢ இறை ஆவி பெற்றவன்␢ வெறிக்கொண்டு உளறுகின்றான்,’␢ என்கின்றாய்.⁾

8 ⁽என் கடவுளின் மக்களாகிய␢ எப்ராயிமுக்கு இறைவாக்கினன்␢ காவலாளியாய் இருக்கின்றான்;␢ ஆயினும் வேடன் ஒருவனின் வலை␢ அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது;␢ அவனுடைய கடவுளின் கோவிலிலும்␢ பகைமை நிலவுகின்றது.⁾

9 ⁽கிபயாவின் நாள்களில்␢ நடந்ததுபோலவே,␢ அவர்கள் கொடுமை செய்வதில்␢ ஆழ்ந்திருக்கின்றார்கள்;␢ அவர்களுடைய தீச்செயலை␢ ஆண்டவர் நினைவில் கொள்வார்;␢ அவர்களுடைய பாவங்களுக்குத்␢ தண்டனை கொடுப்பார்.⁾

10 ⁽பாலைநிலத்தில்␢ திராட்சைக் குலைகளைக்␢ கண்டது போல்␢ நான் இஸ்ரயேலைக்␢ கண்டுபிடித்தேன்.␢ பருவகாலத் தொடக்கத்தின்␢ முதல் அத்திப் பழங்களைப்போல்␢ உங்கள் தந்தையரைக்␢ கண்டு பிடித்தேன்.␢ அவர்களோ␢ பாகால் பெயோருக்கு வந்து,␢ மானக்கேடானவற்றுக்குத்␢ தங்களையே நேர்ந்து கொண்டார்கள்.⁾

11 ⁽எப்ராயிமின், மேன்மை␢ பறவைபோல் பறந்தோடிவிடும்;␢ அவர்களுக்குள்␢ பிறப்போ, கருத்தாங்குவதோ,␢ கருத்தரிப்பதோ எதுவுமே இராது.⁾

12 ⁽அவர்கள் பிள்ளைகளைப்␢ பெற்று வளர்த்தாலும்,␢ ஒருவனும் எஞ்சியிராமல்␢ அப்பிள்ளைகளை␢ இழக்கச் செய்வேன்;␢ நான் அவர்களைவிட்டு␢ அகன்றுவிட்டால்,␢ அவர்களுக்கு ஐயோ கேடு!⁾

13 ⁽நான் பார்த்ததற்கிணங்க,␢ எப்ராயிம் தம் மக்களைக்␢ கொள்ளைப் பொருளாய்␢ ஆக்கியிருக்கின்றான்;␢ எப்ராயிம் தம் மக்களையெல்லாம்␢ கொலைக் களத்திற்குக்␢ கூட்டிச் செல்வான்.⁾

14 ⁽ஆண்டவரே,␢ அவர்களுக்குக் கொடுத்தருளும்,␢ எதைக் கொடுப்பீர்?␢ கருச்சிதைவையும் கருப்பையையும்␢ பால் சுரவா முலைகளையும்␢ கொடுத்தருளும்.⁾

15 ⁽அவர்களின்␢ கொடுஞ்செயல்கள் யாவும்␢ கில்காலில் உருவாயின;␢ அங்கேதான் நான் அவர்களைப் § பகைக்கத் தொடங்கினேன்;␢ அவர்களுடைய␢ தீச்செயல்களை முன்னிட்டு␢ என் வீட்டினின்றும்␢ நான் அவர்களை விரட்டியடிப்பேன்;␢ இனி அவர்கள்மேல்␢ அன்புகொள்ள மாட்டேன்,␢ அவர்களின் தலைவர்கள் அனைவரும்␢ கலகக்காரராய் இருக்கிறார்கள்.⁾

16 ⁽எப்ராயிம் மக்கள்␢ வெட்டுண்டு வீழ்ந்தார்கள்;␢ அவர்களுடைய வேர்␢ உலர்ந்து போயிற்று;␢ இனிமேல் அவர்கள்␢ கனி கொடுக்கமாட்டார்கள்;␢ அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும்,␢ நான் அவர்களுடைய␢ அன்புக் குழந்தைகளைக்␢ கொன்றுவிடுவேன்.⁾

17 ⁽என் கடவுள்␢ அவர்களைத் தள்ளிவிடுவார்;␢ ஏனெனில், அவர்கள்␢ அவருக்குச் செவி கொடுக்கவில்லை;␢ வேற்றினத்தார் நடுவில் அவர்கள்␢ நாடோடிகளாய்த் திரிவார்கள்.⁾

Hosea 9 ERV IRV TRV