சங்கீதம் 78
1 என் ஜனங்களே என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.
2 என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
4 பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
7 தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து தேவனுடைய செயல்களை மறவாமல் அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
9 ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகுகாட்டினார்கள்.
10 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும் அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,
11 அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12 அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
13 கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
14 பகலிலே மேகத்தினாலும் இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
15 வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
16 கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம்மூட்டினார்கள்.
18 தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
19 அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
20 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள்.
21 ஆகையால் கர்த்தர் அதைக்கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
22 யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.
23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25 தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.
26 ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
27 மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,
28 அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.
29 அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
30 அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,
31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
33 ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
35 தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
36 ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
37 அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.
38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
39 அவர்கள் மாம்சமென்றும் திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
40 எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.
41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
42 அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.
43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக் கூடாதபடி செய்தார்.
45 அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும் அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
48 அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும, அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
49 தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும் சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
50 அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
51 எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவையும் அழித்து;
52 தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல்மூடிப்போட்டது.
54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
55 அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
57 தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
58 தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
59 தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
60 தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
61 தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
62 தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
63 அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
64 அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
65 அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும் திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
66 தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
70 தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
71 கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
72 இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
Cross Reference
1 Samuel 30:31
ଓ ହିବ୍ରୋଣକକ୍ସ୍ଟ ଦାଉଦ ଆଣିଥିବା ଦ୍ରବ୍ଯ ଏହି ନେତାମାନଙ୍କ ନିକଟକକ୍ସ୍ଟ ପଠାଇଲେ। ଏବଂ ଅନ୍ୟ ସ୍ଥାନ ନିକଟକକ୍ସ୍ଟ ପଠାଇଲେ। ଯେଉଁଠା ରେ ଦାଉଦ ଓ ତାଙ୍କର ଲୋକମାନେ ଗମନାଗମନ ହେଉଥିଲେ।
1 Samuel 23:2
ଦାଉଦ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ପଚାରିଲେ, ମୁ ପଲେଷ୍ଟୀୟମାନଙ୍କ ବିରକ୍ସ୍ଟଦ୍ଧ ରେ ୟକ୍ସ୍ଟଦ୍ଧ କରିବି କି?
1 Samuel 23:9
ଦାଉଦ ଜାଣିପାରିଲେ ଶାଉଲ ତାଙ୍କ ବିରକ୍ସ୍ଟଦ୍ଧ ରେ ୟକ୍ସ୍ଟଦ୍ଧ କରିବାକୁ ଯୋଜନା କରିଛନ୍ତି। ତେଣୁ ଦାଉଦ ଯାଜକ ଅବିଯାଥରକକ୍ସ୍ଟ କହିଲେ, ଏଠାକକ୍ସ୍ଟ ଏଫୋନ୍ ଆଣ।
1 Samuel 23:4
ଦାଉଦ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ପକ୍ସ୍ଟନର୍ବାର ପଚାରିଲେ, ତହିଁରେ ସଦାପ୍ରଭୁ ଉତ୍ତର ଦଇେ କହିଲେ, ଉଠ, କିଯୀଲାକକ୍ସ୍ଟ ୟାଅ। କାରଣ, ଆମ୍ଭେ ତୁମ୍ଭର ସହାୟକ ଦବେୀଗଣଙ୍କକ୍ସ୍ଟ ହରାଇବା ପାଇଁ। ଆମ୍ଭେ ପଲେଷ୍ଟୀୟମାନଙ୍କୁ ତକ୍ସ୍ଟମ୍ଭ ହସ୍ତ ରେ ସମର୍ପଣ କରିବା।
1 Chronicles 29:7
ସମାନେେ ଏହି ସମସ୍ତ ବସ୍ତୁ ପରମେଶ୍ବରଙ୍କ ମନ୍ଦିର ନିମନ୍ତେ ଦେଲେ : ପାଞ୍ଚ ହଜାର ତାଳନ୍ତ ଓ ଦଶ ହଜାର ତାରିକ୍ ମୁଦ୍ରା ଓ ଦଶ ହଜାର ତାଳନ୍ତ ରୂପା ଓ ଅଠର ହଜାର ତାଳନ୍ତ ପିତ୍ତଳ ଓ ଏକ ଲକ୍ଷ ତାଳନ୍ତ ଲୁହା ଦେଲେ।
Psalm 25:4
ହେ ସଦାପ୍ରଭୁ, ମାେତେ ତୁମ୍ଭର ପଥରେ ଚାଲିବାକୁ ସାହାୟ୍ଯ କର। ତୁମ୍ଭର ମାର୍ଗରେ ଚାଲିବାକୁ ଶିକ୍ଷା ପ୍ରଦାନ କର।
Psalm 27:4
ମୁଁ ସଦାପ୍ରଭୁଙ୍କଠାରେ ଗୋଟିଏ ମାତ୍ର ବିଷଯ ପ୍ରାର୍ଥନା କରେ, ୟପରେି ମାରେ ଜୀବନସାରା ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉପାସନା ମନ୍ଦିରରେ ବସିବାକୁ ସୁଯୋଗ ପାଏ, ୟାହା ଫଳରେ କି ମୁଁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ସୌନ୍ଦର୍ୟ୍ଯକୁ ଦେଖିପାରିବି ଓ ତାଙ୍କ ପ୍ରାସାଦକୁ ଦର୍ଶନ କରିପାରିବି।
Psalm 143:8
ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭର ସ୍ନହପେୂର୍ଣ୍ଣ କରୁଣା ମାେତେ ପ୍ରଭାତରେ ଦଖାେଅ। ମୁଁ ତୁମ୍ଭ ଉପରେ ଭରସା କରେ। ମୁଁ ଯେଉଁ ପଥରେ ୟିବା ଉଚିତ୍ ମାେତେ ସହେି ପଥ ଦଖାେଅ। କାରଣ ମୁଁ ମାରେ ପ୍ରାଣ ତୁମ୍ଭ ହାତରେ ଟକେି ଦଇେଅଛି।
Proverbs 3:5
ତୁମ୍ଭେ ସର୍ବାନ୍ତଃ ହୃଦଯ ରେ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ବିଶ୍ବାସ କର ଏବଂ ନିଜର ଚତୁରତା ଉପ ରେ ନିର୍ଭର କରନାହିଁ।
Ezekiel 36:37
ସଦାପ୍ରଭୁ, ମାରେ ପ୍ରଭୁ ଏ କଥା କହନ୍ତି, ପୁଣି ଥରେ ମୁଁ ଇଶ୍ରାୟେଲ ବଂଶର ପ୍ରାର୍ଥନା ଶୁଣିବି। ମୁଁ ସମାନଙ୍କେୁ ଦ୍ବିଗୁଣିତ କରିବି, ଯାହା ଫଳ ରେ ସମାନେେ ପଲ ରେ ଥିବା ମଷେ ସଂଖ୍ଯକ ହବେେ।
1 Kings 2:11
ଦାଉଦ ଇଶ୍ରାୟେଲ ରେ ଗ୍ଭଳିଶ ବର୍ଷ ରାଜତ୍ବ କରିଥିଲେ। ସେ ହିବ୍ରୋଣ ରେ ସାତବର୍ଷ ଓ ୟିରୁଶାଲମ ରେ ତତେିଶ ବର୍ଷ ରାଜତ୍ବ କରିଥିଲେ।
2 Samuel 15:7
ଏହିପରି ଗ୍ଭରି ବର୍ଷ ପରେ ଅବଶାଲୋମ ରାଜା ଦାଉଦଙ୍କକ୍ସ୍ଟ କହିଲେ, ଦୟାକରି ମାେତେ ହିବ୍ରୋଣକକ୍ସ୍ଟ ମାରେ ଶପଥ ପକ୍ସ୍ଟରଣ କରିବା ପାଇଁ ୟିବାକକ୍ସ୍ଟ ଦିଅନ୍ତକ୍ସ୍ଟ।
Numbers 13:22
ଆଉ ସମାନେେ ଦକ୍ଷିଣ ଦିଗ ଦଇେ ହିବ୍ରୋଣ ରେ ୟାଇ ଉପସ୍ଥିତ ହେଲେ, ସହେି ସ୍ଥାନ ରେ ଅହୀମାନ୍, ଶେଶଯ, ତଲ୍ମଯ, ଏହିମାନେ ଅନାକର ବଂଶଧର ବାସ କରୁଥିଲେ। ମିଶରସ୍ଥିତ ସୋଯନର ସାତବର୍ଷ ପୂର୍ବେ ହିବ୍ରୋଣ ନିର୍ମାଣ ହାଇେଥିଲା।
Numbers 27:21
ପୁଣି ସେ ଇଲିଯାସର ଯାଜକ ସମ୍ମୁଖ ରେ ଠିଆ ହବେ, ଇଲିଯାସର ତାହା ପାଇଁ ଊରୀମର ବିଚାର ଦ୍ବାରା ସଦାପ୍ରଭିଙ୍କ ସମ୍ମୁଖ ରେ ସେ ପଚାରିବ; ତବେେ ସମୁଦାଯ ମଣ୍ତଳୀ 'ବାହାରକୁ ଯିବେ'ଓ ତାଙ୍କର ଆଜ୍ଞା ଅନୁସାରେ ଆସିବେ।
Joshua 14:13
ଯିହାଶୂେୟ ୟିଫକ୍ସ୍ଟନ୍ନିଙ୍କର ପକ୍ସ୍ଟତ୍ର କାଲେବ୍ଙ୍କକ୍ସ୍ଟ ଆଶୀର୍ବାଦ କଲେ ଏବଂ ହିବ୍ରୋଣ ସହରକକ୍ସ୍ଟ ତାଙ୍କୁ ଦେଲେ।
Judges 1:1
ଯିହାଶୂେୟଙ୍କର ମୃତକ୍ସ୍ଟ୍ଯପରେ ଇଶ୍ରାୟେଲର ଲେୀକମାନେ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କଲେ, ସମାନେେ ସଦାପ୍ରଭୁଙ୍କର ଆଦେଶ ମାଗିଲେ, ପ୍ରଥମେ କେଉଁ ପରିବାରବର୍ଗର ଲୋକମାନେ କିଣାନୀଯ ଲୋକମାନଙ୍କ ବିରକ୍ସ୍ଟଦ୍ଧ ରେ ୟକ୍ସ୍ଟଦ୍ଧ କରିବାକୁ ଯିବେ?
1 Samuel 30:7
ଦାଉଦ ଅହୀମଲକରେ ପକ୍ସ୍ଟତ୍ର ଅବିଯାଥର ଯାଜକକକ୍ସ୍ଟ କହିଲେ, ମାେ ପାଖକକ୍ସ୍ଟ ଏଫୋଦ ଆଣ।
2 Samuel 2:11
ଦାଉଦ ଥିଲେ ହିବ୍ରୋଣର ରାଜା। ସେ ୟିହକ୍ସ୍ଟଦାର ପରିବାରବର୍ଗ ଉପରେ ସାଢେ ସାତ ବର୍ଷ ଶାସନ କଲେ।
2 Samuel 5:1
ତା'ପରେ ଇଶ୍ରାୟେଲର ସମସ୍ତ ପରିବାରବର୍ଗ ହିବ୍ରୋଣଠାରେ ଦାଉଦଙ୍କ ନିକଟକକ୍ସ୍ଟ ଆସିଲେ। ସମାନେେ କହିଲେ, ଆମ୍ଭମାନେେ ତୁମ୍ଭର ନିଜ ପରିବାର।
2 Samuel 5:19
ଦାଉଦ ସଦାପ୍ରଭୁଙ୍କ ସମ୍ମକ୍ସ୍ଟଖ ରେ ପଚାରିଲେ, ମାରେପଲେଷ୍ଟୀୟମାନଙ୍କ ସହିତ ୟକ୍ସ୍ଟଦ୍ଧ କରିବା ଉଚିତ୍ କି? ପଲେଷ୍ଟୀୟମାନଙ୍କୁ ପରାସ୍ତ କରିବା ପାଇଁ ଆପଣ ମାେତେ ସାହାୟ୍ଯ କରିବେ କି?
2 Samuel 5:23
ଦାଉଦ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କଲେ ଏବଂ ତା'ପରେ ସଦାପ୍ରଭୁ ତାଙ୍କୁ କହିଲେ, ସଠାେରେ ଆଗକକ୍ସ୍ଟ ୟାଅ ନାହିଁ। ତୁମ୍ଭମାନେେ ସମାନଙ୍କେ ପଛ ରେ ୟାଅ ଏବଂ ତୂତ୍ବୃକ୍ଷ ଆର ପାଶର୍ବ ରେ ସମାନଙ୍କେୁ ପଛପଟକ୍ସ୍ଟ ଆକ୍ରମଣ କର।
Genesis 32:2
ଯେତବେେଳେ ଯାକୁବ ସମାନଙ୍କେୁ ଦେଖିଲେ, ସେ କହିଲେ, ଏହା ହେଉଛି ପରମେଶ୍ବରଙ୍କର ଛାଉଣୀ ତେଣୁ ଯାକୁବ ସହେି ସ୍ଥାନର ନାମ ମହନଯୀମ୍ ରଖିଲେ।