Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ephesians 6:8 in Tamil

Home Bible Ephesians Ephesians 6 Ephesians 6:8

எபேசியர் 6:8
மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.

Tamil Indian Revised Version
மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
அவரவர் செய்யும் நற்செயலுக்கு ஏற்றபடி ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பலன் தருவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அடிமைகள்போல இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொருவரும் தத்தம் நற்செயலுக்கு ஏற்றபடி பலன்களைப் பெறுவர்.

Thiru Viviliam
அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ!⒫

Ephesians 6:7Ephesians 6Ephesians 6:9

King James Version (KJV)
Knowing that whatsoever good thing any man doeth, the same shall he receive of the Lord, whether he be bond or free.

American Standard Version (ASV)
knowing that whatsoever good thing each one doeth, the same shall he receive again from the Lord, whether `he be’ bond or free.

Bible in Basic English (BBE)
In the knowledge that for every good thing anyone does, he will have his reward from the Lord, If he is a servant or if he is free.

Darby English Bible (DBY)
knowing that whatever good each shall do, this he shall receive of [the] Lord, whether bond or free.

World English Bible (WEB)
knowing that whatever good thing each one does, he will receive the same again from the Lord, whether he is bound or free.

Young’s Literal Translation (YLT)
having known that whatever good thing each one may do, this he shall receive from the Lord, whether servant or freeman.

எபேசியர் Ephesians 6:8
மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
Knowing that whatsoever good thing any man doeth, the same shall he receive of the Lord, whether he be bond or free.

εἰδότεςeidotesee-THOH-tase
ὅτιhotiOH-tee
hooh
ἐάνeanay-AN
τιtitee
ἕκαστοςhekastosAKE-ah-stose
ποιήσῃpoiēsēpoo-A-say
ἀγαθόνagathonah-ga-THONE
τοῦτοtoutoTOO-toh
κομιεῖταιkomieitaikoh-mee-EE-tay
παρὰparapa-RA
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
εἴτεeiteEE-tay
δοῦλοςdoulosTHOO-lose
εἴτεeiteEE-tay
ἐλεύθεροςeleutherosay-LAYF-thay-rose

Cross Reference

கொலோசெயர் 3:24
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

கொலோசெயர் 3:11
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

எபிரெயர் 10:35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.

கலாத்தியர் 3:28
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

2 கொரிந்தியர் 5:10
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

லுூக்கா 14:14
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.

மத்தேயு 16:27
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

எபிரெயர் 11:26
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தயை அதிக பாக்கியமென்று எண்ணினான்.

ரோமர் 2:6
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

லுூக்கா 6:35
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,

மத்தேயு 10:41
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.

மத்தேயு 6:4
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

மத்தேயு 6:1
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

மத்தேயு 5:12
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

நீதிமொழிகள் 11:18
துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.


Tags மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல் கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்
Ephesians 6:8 in Tamil Concordance Ephesians 6:8 in Tamil Interlinear Ephesians 6:8 in Tamil Image