Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 9:32 in Tamil

Home Bible Romans Romans 9 Romans 9:32

ரோமர் 9:32
என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

Tamil Easy Reading Version
காரணம் அவர்கள் அதனை தேவனில் நம்பிக்கை வைக்காமல், தங்கள் செயல்கள் மூலம் தேடினர். தடுக்கி விழத்தக்க கல்லிலேயே தடுக்கி விழுந்தார்கள்.

Thiru Viviliam
இதன் காரணம் என்ன? அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே, ‘தடைக்கல்லின் மேல்’ தடுக்கி விழுந்தனர்.

Romans 9:31Romans 9Romans 9:33

King James Version (KJV)
Wherefore? Because they sought it not by faith, but as it were by the works of the law. For they stumbled at that stumblingstone;

American Standard Version (ASV)
Wherefore? Because `they sought it’ not by faith, but as it were by works. They stumbled at the stone of stumbling;

Bible in Basic English (BBE)
Why? Because they were not searching for it by faith, but by works. They came up against the stone which was in the way;

Darby English Bible (DBY)
Wherefore? Because [it was] not on the principle of faith, but as of works. They have stumbled at the stumblingstone,

World English Bible (WEB)
Why? Because they didn’t seek it by faith, but as it were by works of the law. They stumbled over the stumbling stone;

Young’s Literal Translation (YLT)
wherefore? because — not by faith, but as by works of law; for they did stumble at the stone of stumbling,

ரோமர் Romans 9:32
என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
Wherefore? Because they sought it not by faith, but as it were by the works of the law. For they stumbled at that stumblingstone;

διατί;diatithee-ah-TEE
ὅτιhotiOH-tee
οὐκoukook
ἐκekake
πίστεως,pisteōsPEE-stay-ose
ἀλλ'allal
ὡςhōsose
ἐξexayks
ἔργωνergōnARE-gone
νόμου·nomouNOH-moo
προσέκοψανprosekopsanprose-A-koh-psahn
γὰρgargahr
τῷtoh
λίθῳlithōLEE-thoh
τοῦtoutoo
προσκόμματος,proskommatosprose-KOME-ma-tose

Cross Reference

1 பேதுரு 2:8
அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

1 கொரிந்தியர் 1:23
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:30
அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

1 யோவான் 5:9
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.

ரோமர் 11:11
இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.

ரோமர் 10:3
எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.

ரோமர் 4:16
ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.

யோவான் 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

லுூக்கா 7:23
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.

லுூக்கா 2:34
பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மத்தேயு 19:16
அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;

மத்தேயு 13:57
அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.


Tags என்னத்தினாலென்றால் அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை இடறுதற்கான கல்லில் இடறினார்கள்
Romans 9:32 in Tamil Concordance Romans 9:32 in Tamil Interlinear Romans 9:32 in Tamil Image