Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 32:10 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 32 Ezekiel 32:10

எசேக்கியேல் 32:10
அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.

Tamil Indian Revised Version
அநேகம் மக்களை உனக்காக திகைக்கச்செய்வேன்; அவர்களின் ராஜாக்கள், தங்களுடைய முகங்களுக்கு முன்பாக என்னுடைய வாளை நான் வீசும்போது மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் உயிருக்காக ஒவ்வொரு நிமிடமும் தத்தளிப்பார்கள்.

Tamil Easy Reading Version
உன்னைப் பற்றி பல ஜனங்கள் அறிந்து திகைக்கும்படி நான் செய்வேன். அவர்களின் அரசர்கள் நான் அவர்கள் முன் வாள் வீசும்போது பயங்கரமாக அஞ்சுவார்கள். நீ விழுகின்ற நாளில் அரசர்கள் ஒவ்வொரு நிமிடமும் பயத்தால் நடுங்குவார்கள். ஒவ்வொரு அரசனும் தன் சொந்த வாழ்க்கைக்காகப் பயப்படுவான்.”

Thiru Viviliam
பல்வேறு மக்களினங்களை உன்னைக் குறித்துத் திகிலடையச் செய்வேன். நான் என் வாளை அவர்களின் மன்னர்கள்முன் வீசுகையில், உன்னைக் குறித்து அவர்கள் நடுக்கமுறுவர். நீ வீழ்ச்சியுறும் நாளில், அவர்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த உயிர் குறித்து நடுங்குவர்.⒫

Ezekiel 32:9Ezekiel 32Ezekiel 32:11

King James Version (KJV)
Yea, I will make many people amazed at thee, and their kings shall be horribly afraid for thee, when I shall brandish my sword before them; and they shall tremble at every moment, every man for his own life, in the day of thy fall.

American Standard Version (ASV)
Yea, I will make many peoples amazed at thee, and their kings shall be horribly afraid for thee, when I shall brandish my sword before them; and they shall tremble at every moment, every man for his own life, in the day of thy fall.

Bible in Basic English (BBE)
And I will make a number of peoples overcome with wonder at you, and their kings will be full of fear because of you, when my sword is waved before them: they will be shaking every minute, every man fearing for his life, in the day of your fall.

Darby English Bible (DBY)
And I will make many peoples amazed at thee, and their kings shall be horribly afraid at thee, when I brandish my sword before them; and they shall tremble at every moment, each one for his life, in the day of thy fall.

World English Bible (WEB)
Yes, I will make many peoples amazed at you, and their kings shall be horribly afraid for you, when I shall brandish my sword before them; and they shall tremble at every moment, every man for his own life, in the day of your fall.

Young’s Literal Translation (YLT)
And I have made many peoples astonished at thee, And their kings are afraid at thee with trembling, In My brandishing My sword before their faces, And they have trembled every moment, Each for his life — in the day of thy fall.

எசேக்கியேல் Ezekiel 32:10
அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.
Yea, I will make many people amazed at thee, and their kings shall be horribly afraid for thee, when I shall brandish my sword before them; and they shall tremble at every moment, every man for his own life, in the day of thy fall.

וַהֲשִׁמּוֹתִ֨יwahăšimmôtîva-huh-shee-moh-TEE
עָלֶ֜יךָʿālêkāah-LAY-ha
עַמִּ֣יםʿammîmah-MEEM
רַבִּ֗יםrabbîmra-BEEM
וּמַלְכֵיהֶם֙ûmalkêhemoo-mahl-hay-HEM
יִשְׂעֲר֤וּyiśʿărûyees-uh-ROO
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
שַׂ֔עַרśaʿarSA-ar
בְּעוֹפְפִ֥יbĕʿôpĕpîbeh-oh-feh-FEE
חַרְבִּ֖יḥarbîhahr-BEE
עַלʿalal
פְּנֵיהֶ֑םpĕnêhempeh-nay-HEM
וְחָרְד֤וּwĕḥordûveh-hore-DOO
לִרְגָעִים֙lirgāʿîmleer-ɡa-EEM
אִ֣ישׁʾîšeesh
לְנַפְשׁ֔וֹlĕnapšôleh-nahf-SHOH
בְּי֖וֹםbĕyômbeh-YOME
מַפַּלְתֶּֽךָ׃mappaltekāma-pahl-TEH-ha

Cross Reference

எசேக்கியேல் 27:35
தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.

எசேக்கியேல் 26:16
கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையாலடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

சகரியா 11:2
தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.

எசேக்கியேல் 30:9
நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.

எரேமியா 51:9
பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

1 இராஜாக்கள் 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

உபாகமம் 32:41
மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.

உபாகமம் 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.

யாத்திராகமம் 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.


Tags அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன் அவர்களின் ராஜாக்கள் தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள் நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்
Ezekiel 32:10 in Tamil Concordance Ezekiel 32:10 in Tamil Interlinear Ezekiel 32:10 in Tamil Image