எசேக்கியேல் 7:19
தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.
Tamil Indian Revised Version
தங்களுடைய வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாக இருக்கும்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும் அவர்களுடைய பொன்னும் அவர்களை விடுவிக்கமுடியாது; அவர்கள் அதினால் தங்களுடைய ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்களுடைய வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாக இருந்தது.
Tamil Easy Reading Version
அவர்கள் தமது தங்கத்தாலும் வெள்ளியாலுமான சிலைகளை வீதிகளில் எறிவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்கள் மீது தன் கோபத்தைக் காட்டும்போது அச்சிலைகளால் அவர்களுக்கு உதவமுடியாமல் இருக்கும். அச்சிலைகள் அவர்களைப் பாவத்தில் விழச்செய்கிற வலையல்லாமல் வேறு எதுவுமில்லை. அச்சிலைகள் ஜனங்களுக்கு உணவைக் கொடுப்பது இல்லை. அச்சிலைகள் அவர்கள் வயிற்றில் உணவை வைப்பதுமில்லை.
Thiru Viviliam
⁽தங்கள் வெள்ளியை␢ வீதிகளில் எறிவர்;.␢ பொன் அவர்களுக்குத்␢ தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்;␢ ஆண்டவரது சீற்றம் பொங்கும்␢ அந்நாளில் அவர்களின்␢ வெள்ளியாலும் பொன்னாலும்␢ அவர்களை விடுவிக்க இயலாது;␢ அவர்கள் மனநிறைவு␢ பெறுவதும் இல்லை;␢ அவர்களின் வயிறு␢ நிரம்புவதும் இல்லை;.␢ ஏனெனில் அவர்களது குற்றப்பழியே␢ அவர்களுக்கு முட்டுக்கட்டையாக␢ ஆகிவிட்டது.⁾
King James Version (KJV)
They shall cast their silver in the streets, and their gold shall be removed: their silver and their gold shall not be able to deliver them in the day of the wrath of the LORD: they shall not satisfy their souls, neither fill their bowels: because it is the stumblingblock of their iniquity.
American Standard Version (ASV)
They shall cast their silver in the streets, and their gold shall be as an unclean thing; their silver and their gold shall not be able to deliver them in the day of the wrath of Jehovah: they shall not satisfy their souls, neither fill their bowels; because it hath been the stumblingblock of their iniquity.
Bible in Basic English (BBE)
They will put out their silver into the streets, and their gold will be as an unclean thing; their silver and their gold will not be able to keep them safe in the day of the wrath of the Lord; they will not get their desire or have food for their need: because it has been the cause of their falling into sin.
Darby English Bible (DBY)
They shall cast their silver in the streets, and their gold shall be as an impurity: their silver and their gold shall not be able to deliver them in the day of Jehovah’s wrath; they shall not satisfy their souls, neither fill their belly; for it hath been the stumbling-block of their iniquity.
World English Bible (WEB)
They shall cast their silver in the streets, and their gold shall be as an unclean thing; their silver and their gold shall not be able to deliver them in the day of the wrath of Yahweh: they shall not satisfy their souls, neither fill their bowels; because it has been the stumbling block of their iniquity.
Young’s Literal Translation (YLT)
Their silver into out-places they cast, And their gold impurity becometh. Their silver and their gold is not able to deliver them, In a day of the wrath of Jehovah, Their soul they do not satisfy, And their bowels they do not fill, For the stumbling-block of their iniquity it hath been.
எசேக்கியேல் Ezekiel 7:19
தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.
They shall cast their silver in the streets, and their gold shall be removed: their silver and their gold shall not be able to deliver them in the day of the wrath of the LORD: they shall not satisfy their souls, neither fill their bowels: because it is the stumblingblock of their iniquity.
| כַּסְפָּ֞ם | kaspām | kahs-PAHM | |
| בַּחוּצ֣וֹת | baḥûṣôt | ba-hoo-TSOTE | |
| יַשְׁלִ֗יכוּ | yašlîkû | yahsh-LEE-hoo | |
| וּזְהָבָם֮ | ûzĕhābām | oo-zeh-ha-VAHM | |
| לְנִדָּ֣ה | lĕniddâ | leh-nee-DA | |
| יִֽהְיֶה֒ | yihĕyeh | yee-heh-YEH | |
| כַּסְפָּ֨ם | kaspām | kahs-PAHM | |
| וּזְהָבָ֜ם | ûzĕhābām | oo-zeh-ha-VAHM | |
| לֹֽא | lōʾ | loh | |
| יוּכַ֣ל | yûkal | yoo-HAHL | |
| לְהַצִּילָ֗ם | lĕhaṣṣîlām | leh-ha-tsee-LAHM | |
| בְּיוֹם֙ | bĕyôm | beh-YOME | |
| עֶבְרַ֣ת | ʿebrat | ev-RAHT | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| נַפְשָׁם֙ | napšām | nahf-SHAHM | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יְשַׂבֵּ֔עוּ | yĕśabbēʿû | yeh-sa-BAY-oo | |
| וּמֵעֵיהֶ֖ם | ûmēʿêhem | oo-may-ay-HEM | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יְמַלֵּ֑אוּ | yĕmallēʾû | yeh-ma-LAY-oo | |
| כִּֽי | kî | kee | |
| מִכְשׁ֥וֹל | mikšôl | meek-SHOLE | |
| עֲוֹנָ֖ם | ʿăwōnām | uh-oh-NAHM | |
| הָיָֽה׃ | hāyâ | ha-YA |
Cross Reference
செப்பனியா 1:18
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.
நீதிமொழிகள் 11:4
கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
எசேக்கியேல் 44:12
அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 14:7
இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,
எசேக்கியேல் 14:3
மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?
ஏசாயா 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
ஏசாயா 30:22
உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
ஏசாயா 2:20
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,
ரோமர் 11:9
அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது;
லுூக்கா 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
மத்தேயு 16:26
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
பிரசங்கி 5:10
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
சங்கீதம் 78:30
அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,
யோபு 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
2 இராஜாக்கள் 7:15
அவர்கள் யோர்தான் மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.
2 இராஜாக்கள் 7:7
இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.
Tags தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள் அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும் கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது
Ezekiel 7:19 in Tamil Concordance Ezekiel 7:19 in Tamil Interlinear Ezekiel 7:19 in Tamil Image