Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 5:21 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 5 Jeremiah 5:21

எரேமியா 5:21
கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.

Tamil Indian Revised Version
கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத மக்களே, கேளுங்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் மதிகேடர்கள், உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன, ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை! உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை!

Thiru Viviliam
⁽கண்ணிருந்தும் காணாத,␢ காதிருந்தும் கேளாத மதிகெட்ட,␢ இதயமற்ற மக்களே, கேளுங்கள்;⁾

Jeremiah 5:20Jeremiah 5Jeremiah 5:22

King James Version (KJV)
Hear now this, O foolish people, and without understanding; which have eyes, and see not; which have ears, and hear not:

American Standard Version (ASV)
Hear now this, O foolish people, and without understanding; that have eyes, and see not; that have ears, and hear not:

Bible in Basic English (BBE)
Give ear now to this, O foolish people without sense; who have eyes but see nothing, and ears without the power of hearing:

Darby English Bible (DBY)
Hear now this, O foolish and heartless people, who have eyes and see not; who have ears, and hear not.

World English Bible (WEB)
Hear now this, foolish people, and without understanding; who have eyes, and don’t see; who have ears, and don’t hear:

Young’s Literal Translation (YLT)
Hear ye, I pray you, this, O people, foolish and without heart, Eyes they have, and they see not, Ears they have, and they hear not.

எரேமியா Jeremiah 5:21
கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.
Hear now this, O foolish people, and without understanding; which have eyes, and see not; which have ears, and hear not:

שִׁמְעוּšimʿûsheem-OO
נָ֣אnāʾna
זֹ֔אתzōtzote
עַ֥םʿamam
סָכָ֖לsākālsa-HAHL
וְאֵ֣יןwĕʾênveh-ANE
לֵ֑בlēblave
עֵינַ֤יִםʿênayimay-NA-yeem
לָהֶם֙lāhemla-HEM
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יִרְא֔וּyirʾûyeer-OO
אָזְנַ֥יִםʾoznayimoze-NA-yeem
לָהֶ֖םlāhemla-HEM
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יִשְׁמָֽעוּ׃yišmāʿûyeesh-ma-OO

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:26
நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்

எசேக்கியேல் 12:2
மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

ஏசாயா 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

ரோமர் 11:8
கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

யோவான் 12:40
அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.

மாற்கு 8:18
உங்களுக்கு கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?

மத்தேயு 13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

எரேமியா 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

எரேமியா 5:4
அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;

எரேமியா 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

ஏசாயா 44:18
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

சங்கீதம் 94:8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

உபாகமம் 32:6
விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே; இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்டபிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?

ஓசியா 7:11
எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.

எரேமியா 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.

ஏசாயா 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.

நீதிமொழிகள் 17:16
ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.

உபாகமம் 29:4
ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.


Tags கண்கள் இருந்தும் காணாமலும் காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே கேளுங்கள்
Jeremiah 5:21 in Tamil Concordance Jeremiah 5:21 in Tamil Interlinear Jeremiah 5:21 in Tamil Image