ஏசாயா 53:4
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
Tamil Indian Revised Version
உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம்.
Tamil Easy Reading Version
ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காகத் தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம்.
Thiru Viviliam
⁽மெய்யாகவே அவர் நம் பிணிகளைத்␢ தாங்கிக்கொண்டார்;␢ நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;␢ நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு␢ நொறுக்கப்பட்டவர் என்றும்␢ சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும்␢ எண்ணினோம்.⁾
King James Version (KJV)
Surely he hath borne our griefs, and carried our sorrows: yet we did esteem him stricken, smitten of God, and afflicted.
American Standard Version (ASV)
Surely he hath borne our griefs, and carried our sorrows; yet we did esteem him stricken, smitten of God, and afflicted.
Bible in Basic English (BBE)
But it was our pain he took, and our diseases were put on him: while to us he seemed as one diseased, on whom God’s punishment had come.
Darby English Bible (DBY)
Surely *he* hath borne our griefs and carried our sorrows; and we, we did regard him stricken, smitten of God, and afflicted.
World English Bible (WEB)
Surely he has borne our sickness, and carried our suffering; yet we considered him plagued, struck by God, and afflicted.
Young’s Literal Translation (YLT)
Surely our sicknesses he hath borne, And our pains — he hath carried them, And we — we have esteemed him plagued, Smitten of God, and afflicted.
ஏசாயா Isaiah 53:4
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
Surely he hath borne our griefs, and carried our sorrows: yet we did esteem him stricken, smitten of God, and afflicted.
| אָכֵ֤ן | ʾākēn | ah-HANE | |
| חֳלָיֵ֙נוּ֙ | ḥŏlāyēnû | hoh-la-YAY-NOO | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| נָשָׂ֔א | nāśāʾ | na-SA | |
| וּמַכְאֹבֵ֖ינוּ | ûmakʾōbênû | oo-mahk-oh-VAY-noo | |
| סְבָלָ֑ם | sĕbālām | seh-va-LAHM | |
| וַאֲנַ֣חְנוּ | waʾănaḥnû | va-uh-NAHK-noo | |
| חֲשַׁבְנֻ֔הוּ | ḥăšabnuhû | huh-shahv-NOO-hoo | |
| נָג֛וּעַ | nāgûaʿ | na-ɡOO-ah | |
| מֻכֵּ֥ה | mukkē | moo-KAY | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| וּמְעֻנֶּֽה׃ | ûmĕʿunne | oo-meh-oo-NEH |
Cross Reference
1 பேதுரு 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
மத்தேயு 8:17
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
கலாத்தியர் 3:13
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார்.
1 யோவான் 2:2
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
1 பேதுரு 3:18
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
ஏசாயா 53:5
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:11
அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
எபிரெயர் 9:28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
யோவான் 19:7
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.
சங்கீதம் 69:26
தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
Tags மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்
Isaiah 53:4 in Tamil Concordance Isaiah 53:4 in Tamil Interlinear Isaiah 53:4 in Tamil Image