Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 31:31 in Tamil

Home Bible Proverbs Proverbs 31 Proverbs 31:31

நீதிமொழிகள் 31:31
அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.

Tamil Indian Revised Version
அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.

Tamil Easy Reading Version
அவளுக்குப் பொருத்தமான பரிசைக் கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.

Thiru Viviliam
⁽அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.⁾

Proverbs 31:30Proverbs 31

King James Version (KJV)
Give her of the fruit of her hands; and let her own works praise her in the gates.

American Standard Version (ASV)
Give her of the fruit of her hands; And let her works praise her in the gates.

Bible in Basic English (BBE)
Give her credit for what her hands have made: let her be praised by her works in the public place.

Darby English Bible (DBY)
Give her of the fruit of her hands, and let her own works praise her in the gates.

World English Bible (WEB)
Give her of the fruit of her hands! Let her works praise her in the gates!

Young’s Literal Translation (YLT)
Give ye to her of the fruit of her hands, And her works do praise her in the gates!

நீதிமொழிகள் Proverbs 31:31
அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.
Give her of the fruit of her hands; and let her own works praise her in the gates.

תְּנוּtĕnûteh-NOO
לָ֭הּlāhla
מִפְּרִ֣יmippĕrîmee-peh-REE
יָדֶ֑יהָyādêhāya-DAY-ha
וִֽיהַלְל֖וּהָwîhallûhāvee-hahl-LOO-ha
בַשְּׁעָרִ֣יםbaššĕʿārîmva-sheh-ah-REEM
מַעֲשֶֽׂיהָ׃maʿăśêhāma-uh-SAY-ha

Cross Reference

சங்கீதம் 128:2
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

எபிரெயர் 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

1 தீமோத்தேயு 5:25
அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.

பிலிப்பியர் 4:17
உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.

ரோமர் 16:12
கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திர்போசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.

ரோமர் 16:6
எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.

ரோமர் 16:1
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

ரோமர் 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39
பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.

மாற்கு 14:7
தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

மத்தேயு 7:20
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

மத்தேயு 7:16
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

நீதிமொழிகள் 31:16
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

நீதிமொழிகள் 11:30
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.


Tags அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள் அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது
Proverbs 31:31 in Tamil Concordance Proverbs 31:31 in Tamil Interlinear Proverbs 31:31 in Tamil Image