Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 24:30 in Tamil

Home Bible Proverbs Proverbs 24 Proverbs 24:30

நீதிமொழிகள் 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

Tamil Indian Revised Version
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

Tamil Easy Reading Version
சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன்.

Thiru Viviliam
சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.

Proverbs 24:29Proverbs 24Proverbs 24:31

King James Version (KJV)
I went by the field of the slothful, and by the vineyard of the man void of understanding;

American Standard Version (ASV)
I went by the field of the sluggard, And by the vineyard of the man void of understanding;

Bible in Basic English (BBE)
I went by the field of the hater of work, and by the vine-garden of the man without sense;

Darby English Bible (DBY)
I went by the field of a sluggard, and by the vineyard of a man void of understanding;

World English Bible (WEB)
I went by the field of the sluggard, By the vineyard of the man void of understanding;

Young’s Literal Translation (YLT)
Near the field of a slothful man I passed by, And near the vineyard of a man lacking heart.

நீதிமொழிகள் Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
I went by the field of the slothful, and by the vineyard of the man void of understanding;

עַלʿalal
שְׂדֵ֣הśĕdēseh-DAY
אִישׁʾîšeesh
עָצֵ֣לʿāṣēlah-TSALE
עָבַ֑רְתִּיʿābartîah-VAHR-tee
וְעַלwĕʿalveh-AL
כֶּ֝֗רֶםkeremKEH-rem
אָדָ֥םʾādāmah-DAHM
חֲסַרḥăsarhuh-SAHR
לֵֽב׃lēblave

Cross Reference

பிரசங்கி 8:9
இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

யோபு 15:17
உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும், நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.

யோபு 5:27
இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படி இருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.

யோபு 4:8
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.

பிரசங்கி 7:15
இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.

பிரசங்கி 4:1
இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.

நீதிமொழிகள் 12:11
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

நீதிமொழிகள் 10:13
புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

நீதிமொழிகள் 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

நீதிமொழிகள் 6:6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

சங்கீதம் 107:42
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.

சங்கீதம் 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.


Tags சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்
Proverbs 24:30 in Tamil Concordance Proverbs 24:30 in Tamil Interlinear Proverbs 24:30 in Tamil Image