நீதிமொழிகள் 19:6
பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
Tamil Indian Revised Version
பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
Tamil Easy Reading Version
ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
Thiru Viviliam
⁽வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்; நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.⁾
King James Version (KJV)
Many will intreat the favour of the prince: and every man is a friend to him that giveth gifts.
American Standard Version (ASV)
Many will entreat the favor of the liberal man; And every man is a friend to him that giveth gifts.
Bible in Basic English (BBE)
Great numbers will make attempts to get the approval of a ruler: and every man is the special friend of him who has something to give.
Darby English Bible (DBY)
Many court the favour of a noble; and every one is friend to a man that giveth.
World English Bible (WEB)
Many will entreat the favor of a ruler, And everyone is a friend to a man who gives gifts.
Young’s Literal Translation (YLT)
Many entreat the face of the noble, And all have made friendship to a man of gifts.
நீதிமொழிகள் Proverbs 19:6
பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
Many will intreat the favour of the prince: and every man is a friend to him that giveth gifts.
| רַ֭בִּים | rabbîm | RA-beem | |
| יְחַלּ֣וּ | yĕḥallû | yeh-HA-loo | |
| פְנֵֽי | pĕnê | feh-NAY | |
| נָדִ֑יב | nādîb | na-DEEV | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| הָ֝רֵ֗עַ | hārēaʿ | HA-RAY-ah | |
| לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH | |
| מַתָּֽן׃ | mattān | ma-TAHN |
Cross Reference
நீதிமொழிகள் 29:26
ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
நீதிமொழிகள் 18:16
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
நீதிமொழிகள் 17:8
பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
நீதிமொழிகள் 21:14
அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.
ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
மத்தேயு 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
நீதிமொழிகள் 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
நீதிமொழிகள் 16:15
ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
சங்கீதம் 45:12
தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
யோபு 29:24
நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.
2 சாமுவேல் 19:19
ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.
ஆதியாகமம் 43:15
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.
ஆதியாகமம் 42:6
யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.
ஆதியாகமம் 32:20
இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.
Tags பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள் கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்
Proverbs 19:6 in Tamil Concordance Proverbs 19:6 in Tamil Interlinear Proverbs 19:6 in Tamil Image