நீதிமொழிகள் 12:28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
Tamil Indian Revised Version
நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
Tamil Easy Reading Version
நீ சரியாக வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கையை அடைவாய். அதுவே என்றென்றும் வாழ்வதற்குரிய வாழ்வாகும்.
Thiru Viviliam
⁽நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.⁾
King James Version (KJV)
In the way of righteousness is life: and in the pathway thereof there is no death.
American Standard Version (ASV)
In the way of righteousness is life; And in the pathway thereof there is no death.
Bible in Basic English (BBE)
In the road of righteousness is life, but the way of the evil-doer goes to death.
Darby English Bible (DBY)
In the path of righteousness is life, and in the pathway thereof there is no death.
World English Bible (WEB)
In the way of righteousness is life; In its path there is no death.
Young’s Literal Translation (YLT)
In the path of righteousness `is’ life, And in the way of `that’ path `is’ no death!
நீதிமொழிகள் Proverbs 12:28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
In the way of righteousness is life: and in the pathway thereof there is no death.
| בְּאֹֽרַח | bĕʾōraḥ | beh-OH-rahk | |
| צְדָקָ֥ה | ṣĕdāqâ | tseh-da-KA | |
| חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM | |
| וְדֶ֖רֶךְ | wĕderek | veh-DEH-rek | |
| נְתִיבָ֣ה | nĕtîbâ | neh-tee-VA | |
| אַל | ʾal | al | |
| מָֽוֶת׃ | māwet | MA-vet |
Cross Reference
3 யோவான் 1:11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
1 யோவான் 3:7
பிள்ளைகளே நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
1 யோவான் 2:29
அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
தீத்து 2:11
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
ரோமர் 6:22
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ரோமர் 5:21
ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
எசேக்கியேல் 18:20
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
எசேக்கியேல் 18:9
என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நீதிமொழிகள் 11:19
நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல் தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
நீதிமொழிகள் 10:16
நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
நீதிமொழிகள் 9:11
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
நீதிமொழிகள் 8:35
என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
உபாகமம் 30:15
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
Tags நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அந்தப் பாதையில் மரணம் இல்லை
Proverbs 12:28 in Tamil Concordance Proverbs 12:28 in Tamil Interlinear Proverbs 12:28 in Tamil Image