Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:87 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:87

சங்கீதம் 119:87
அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

Tamil Indian Revised Version
அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.

Thiru Viviliam
⁽அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை␢ ஏறக்குறைய அழித்துவிட்டனர்;␢ நானோ உம் நியமங்களைக்␢ கைவிடவில்லை.⁾

Psalm 119:86Psalm 119Psalm 119:88

King James Version (KJV)
They had almost consumed me upon earth; but I forsook not thy precepts.

American Standard Version (ASV)
They had almost consumed me upon earth; But I forsook not thy precepts.

Bible in Basic English (BBE)
They had almost put an end to me on earth; but I did not give up your orders.

Darby English Bible (DBY)
They had almost consumed me upon the earth; but as for me, I forsook not thy precepts.

World English Bible (WEB)
They had almost wiped me from the earth, But I didn’t forsake your precepts.

Young’s Literal Translation (YLT)
Almost consumed me on earth have they, And I — I have not forsaken Thy precepts.

சங்கீதம் Psalm 119:87
அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
They had almost consumed me upon earth; but I forsook not thy precepts.

כִּ֭מְעַטkimʿaṭKEEM-at
כִּלּ֣וּנִיkillûnîKEE-loo-nee
בָאָ֑רֶץbāʾāreṣva-AH-rets
וַ֝אֲנִ֗יwaʾănîVA-uh-NEE
לֹאlōʾloh
עָזַ֥בְתִּיʿāzabtîah-ZAHV-tee
פִקֻּדֶֽיךָ׃piqqudêkāfee-koo-DAY-ha

Cross Reference

1 சாமுவேல் 20:3
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

ஏசாயா 58:2
தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.

சங்கீதம் 119:61
துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.

சங்கீதம் 119:51
அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

2 சாமுவேல் 17:16
இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி: நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.

1 சாமுவேல் 26:24
இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.

1 சாமுவேல் 26:9
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

1 சாமுவேல் 24:6
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

1 சாமுவேல் 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.

மத்தேயு 10:28
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


Tags அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை
Psalm 119:87 in Tamil Concordance Psalm 119:87 in Tamil Interlinear Psalm 119:87 in Tamil Image