சங்கீதம் 59:11
அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
Tamil Indian Revised Version
அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
Tamil Easy Reading Version
தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள். என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
Thiru Viviliam
⁽அவர்களை ஒரேயடியாய்க்␢ கொன்று விடாதேயும்;␢ இல்லையேல், உம் வல்லமையை␢ என் மக்கள் மறந்துவிடுவர்;␢ என் தலைவரே! எங்கள் கேடயமே!␢ அவர்களை உமது வலிமையால்␢ நிலைகுலையச் செய்யும்.⁾
King James Version (KJV)
Slay them not, lest my people forget: scatter them by thy power; and bring them down, O Lord our shield.
American Standard Version (ASV)
Slay them not, lest my people forget: Scatter them by thy power, and bring them down, O Lord our shield.
Bible in Basic English (BBE)
Put them not to death, for so my people will keep the memory of them: let them be sent in all directions by your power; make them low, O Lord our saviour.
Darby English Bible (DBY)
Slay them not, lest my people forget; by thy power make them wander, and bring them down, O Lord, our shield.
Webster’s Bible (WBT)
The God of my mercy will succor me: God will let me see my desire upon my enemies.
World English Bible (WEB)
Don’t kill them, or my people may forget. Scatter them by your power, and bring them down, Lord our shield.
Young’s Literal Translation (YLT)
Slay them not, lest my people forget, Shake them by Thy strength, And bring them down, O Lord our shield.
சங்கீதம் Psalm 59:11
அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
Slay them not, lest my people forget: scatter them by thy power; and bring them down, O Lord our shield.
| אַל | ʾal | al | |
| תַּהַרְגֵ֤ם׀ | tahargēm | ta-hahr-ɡAME | |
| פֶּֽן | pen | pen | |
| יִשְׁכְּח֬וּ | yiškĕḥû | yeesh-keh-HOO | |
| עַמִּ֗י | ʿammî | ah-MEE | |
| הֲנִיעֵ֣מוֹ | hănîʿēmô | huh-nee-A-moh | |
| בְ֭חֵילְךָ | bĕḥêlĕkā | VEH-hay-leh-ha | |
| וְהוֹרִידֵ֑מוֹ | wĕhôrîdēmô | veh-hoh-ree-DAY-moh | |
| מָֽגִנֵּ֣נוּ | māginnēnû | ma-ɡee-NAY-noo | |
| אֲדֹנָֽי׃ | ʾădōnāy | uh-doh-NAI |
Cross Reference
சங்கீதம் 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 106:27
அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
பிரசங்கி 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
எசேக்கியேல் 12:15
அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 14:22
ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின் மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.
லுூக்கா 1:51
தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
லுூக்கா 21:21
அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 9:6
அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
சங்கீதம் 84:9
எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.
சங்கீதம் 52:5
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
லேவியராகமம் 26:33
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
உபாகமம் 4:9
ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,
உபாகமம் 4:27
கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.
உபாகமம் 28:64
கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
உபாகமம் 30:3
உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.
நியாயாதிபதிகள் 1:6
அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.
யோபு 40:12
பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து அவனைப் பணியப்பண்ணி துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
சங்கீதம் 44:11
நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
ஆதியாகமம் 4:12
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.
Tags அவர்களைக் கொன்றுபோடாதேயும் என் ஜனங்கள் மறந்துபோவார்களே எங்கள் கேடகமாகிய ஆண்டவரே உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து அவர்களைத் தாழ்த்திப்போடும்
Psalm 59:11 in Tamil Concordance Psalm 59:11 in Tamil Interlinear Psalm 59:11 in Tamil Image