Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 49:10 in Tamil

Home Bible Psalm Psalm 49 Psalm 49:10

சங்கீதம் 49:10
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

Tamil Indian Revised Version
ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

Tamil Easy Reading Version
பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள். பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.

Thiru Viviliam
⁽ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும்␢ மாண்டழிவதுபோல,␢ ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை␢ நாம் காண்கின்றோம் அன்றோ!␢ அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப்␢ பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.⁾

Psalm 49:9Psalm 49Psalm 49:11

King James Version (KJV)
For he seeth that wise men die, likewise the fool and the brutish person perish, and leave their wealth to others.

American Standard Version (ASV)
For he shall see it. Wise men die; The fool and the brutish alike perish, And leave their wealth to others.

Bible in Basic English (BBE)
For he sees that wise men come to their end, and foolish persons of low behaviour come to destruction together, letting their wealth go to others.

Darby English Bible (DBY)
For he seeth that wise men die; all alike, the fool and the brutish perish, and they leave their wealth to others.

Webster’s Bible (WBT)
That he should still live for ever, and not see corruption.

World English Bible (WEB)
For he sees that wise men die; Likewise the fool and the senseless perish, And leave their wealth to others.

Young’s Literal Translation (YLT)
For he seeth wise men die, Together the foolish and brutish perish, And have left to others their wealth.

சங்கீதம் Psalm 49:10
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
For he seeth that wise men die, likewise the fool and the brutish person perish, and leave their wealth to others.

כִּ֤יkee
יִרְאֶ֨ה׀yirʾeyeer-EH
חֲכָ֘מִ֤יםḥăkāmîmhuh-HA-MEEM
יָמ֗וּתוּyāmûtûya-MOO-too
יַ֤חַדyaḥadYA-hahd
כְּסִ֣ילkĕsîlkeh-SEEL
וָבַ֣עַרwābaʿarva-VA-ar
יֹאבֵ֑דוּyōʾbēdûyoh-VAY-doo
וְעָזְב֖וּwĕʿozbûveh-oze-VOO
לַאֲחֵרִ֣יםlaʾăḥērîmla-uh-hay-REEM
חֵילָֽם׃ḥêlāmhay-LAHM

Cross Reference

லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

சங்கீதம் 94:8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

சங்கீதம் 39:6
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

நீதிமொழிகள் 30:2
மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.

சங்கீதம் 73:22
நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.

எபிரெயர் 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

1 தீமோத்தேயு 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

ரோமர் 5:12
இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

எரேமியா 17:11
அநியாயாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

எரேமியா 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.

பிரசங்கி 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

பிரசங்கி 5:13
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.

பிரசங்கி 2:26
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

பிரசங்கி 2:16
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.

நீதிமொழிகள் 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

நீதிமொழிகள் 11:4
கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

சங்கீதம் 92:6
மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.

சங்கீதம் 49:17
அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.

சங்கீதம் 17:14
மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.


Tags ஞானிகளும் மரித்து அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்
Psalm 49:10 in Tamil Concordance Psalm 49:10 in Tamil Interlinear Psalm 49:10 in Tamil Image