Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 14:6 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 14 2 Chronicles 14:6

2 நாளாகமம் 14:6
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
இந்த சமாதானமான காலத்தில் ஆசா யூதா நாட்டில் பலமிக்க நகரங்களை உருவாக்கினான். இக்கால கட்டத்தில் ஆசா எந்தவிதமான போரிலும் ஈடுபடவில்லை. ஏனென்றால் கர்த்தர் அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.

Thiru Viviliam
பின்பு, அவன் யூதாவில் அரண்சூழ் நகர்களை எழுப்பினான். ஏனெனில், நாடு அமைதியாக இருந்தது. அவ்வாண்டுகளில் எவனும் அவனோடு போரிடவில்லை, ஆண்டவர் அவனுக்கு ஓய்வு அளித்திருந்தார்.

2 Chronicles 14:52 Chronicles 142 Chronicles 14:7

King James Version (KJV)
And he built fenced cities in Judah: for the land had rest, and he had no war in those years; because the LORD had given him rest.

American Standard Version (ASV)
And he built fortified cities in Judah; for the land was quiet, and he had no war in those years, because Jehovah had given him rest.

Bible in Basic English (BBE)
He made walled towns in Judah, for the land was quiet and there were no wars in those years, because the Lord had given him rest.

Darby English Bible (DBY)
And he built fortified cities in Judah, for the land had rest, and he had no war in those years; because Jehovah had given him rest.

Webster’s Bible (WBT)
And he built fortified cities in Judah: for the land had rest, and he had no war in those years; because the LORD had given him rest.

World English Bible (WEB)
He built fortified cities in Judah; for the land was quiet, and he had no war in those years, because Yahweh had given him rest.

Young’s Literal Translation (YLT)
And he buildeth cities of bulwarks in Judah, for the land hath quiet, and there is no war with him in these years, because Jehovah hath given rest to him.

2 நாளாகமம் 2 Chronicles 14:6
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
And he built fenced cities in Judah: for the land had rest, and he had no war in those years; because the LORD had given him rest.

וַיִּ֛בֶןwayyibenva-YEE-ven
עָרֵ֥יʿārêah-RAY
מְצוּרָ֖הmĕṣûrâmeh-tsoo-RA
בִּֽיהוּדָ֑הbîhûdâbee-hoo-DA
כִּֽיkee
שָׁקְטָ֣הšoqṭâshoke-TA
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
וְאֵיןwĕʾênveh-ANE
עִמּ֤וֹʿimmôEE-moh
מִלְחָמָה֙milḥāmāhmeel-ha-MA
בַּשָּׁנִ֣יםbaššānîmba-sha-NEEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
כִּֽיkee
הֵנִ֥יחַhēnîaḥhay-NEE-ak
יְהוָ֖הyĕhwâyeh-VA
לֽוֹ׃loh

Cross Reference

2 நாளாகமம் 15:15
இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள், தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.

யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,

1 நாளாகமம் 22:9
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.

சங்கீதம் 46:9
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

2 நாளாகமம் 11:5
ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

2 நாளாகமம் 8:2
ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.

1 இராஜாக்கள் 5:4
ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.

நியாயாதிபதிகள் 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

நியாயாதிபதிகள் 3:30
இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.

நியாயாதிபதிகள் 3:11
தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.

யோசுவா 23:1
கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,


Tags கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால் அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்
2 Chronicles 14:6 in Tamil Concordance 2 Chronicles 14:6 in Tamil Interlinear 2 Chronicles 14:6 in Tamil Image