Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Timothy 1:7 in Tamil

Home Bible 1 Timothy 1 Timothy 1 1 Timothy 1:7

1 தீமோத்தேயு 1:7
தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

Tamil Indian Revised Version
தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.

Tamil Easy Reading Version
அந்த மக்கள் நியாயப்பிரமாண போதகர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தாம் என்ன சொல்கிறோம் என்பது தெரியவில்லை. அதோடு தாம் உறுதியாகச் சொல்கின்றவற்றைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை.

Thiru Viviliam
அவர்கள் திருச்சட்ட போதகர்களாக இருக்க விரும்புகின்றனர். தாங்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும், எவற்றை வலியுறுத்துகின்றார்கள் என்பதையும் அறியாமல் இருக்கின்றார்கள்.

1 Timothy 1:61 Timothy 11 Timothy 1:8

King James Version (KJV)
Desiring to be teachers of the law; understanding neither what they say, nor whereof they affirm.

American Standard Version (ASV)
desiring to be teachers of the law, though they understand neither what they say, nor whereof they confidently affirm.

Bible in Basic English (BBE)
Desiring to be teachers of the law, though they have no knowledge of what they say or of the statements which they make so certainly.

Darby English Bible (DBY)
desiring to be law-teachers, not understanding either what they say or concerning what they [so] strenuously affirm.

World English Bible (WEB)
desiring to be teachers of the law, though they understand neither what they say, nor about what they strongly affirm.

Young’s Literal Translation (YLT)
willing to be teachers of law, not understanding either the things they say, nor concerning what they asseverate,

1 தீமோத்தேயு 1 Timothy 1:7
தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
Desiring to be teachers of the law; understanding neither what they say, nor whereof they affirm.

θέλοντεςthelontesTHAY-lone-tase
εἶναιeinaiEE-nay
νομοδιδάσκαλοιnomodidaskaloinoh-moh-thee-THA-ska-loo
μὴmay
νοοῦντεςnoountesnoh-OON-tase
μήτεmēteMAY-tay
haa
λέγουσινlegousinLAY-goo-seen
μήτεmēteMAY-tay
περὶperipay-REE
τίνωνtinōnTEE-none
διαβεβαιοῦνταιdiabebaiountaithee-ah-vay-vay-OON-tay

Cross Reference

2 பேதுரு 2:12
இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள்.

ரோமர் 1:22
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

1 தீமோத்தேயு 6:4
அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குத்தத்தங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,

தீத்து 1:10
அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

2 தீமோத்தேயு 3:7
யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.

கலாத்தியர் 5:3
மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன்.

கலாத்தியர் 4:21
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.

கலாத்தியர் 3:5
அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?

கலாத்தியர் 3:2
ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

ரோமர் 2:19
நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1
சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.

யோவான் 9:40
அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.

யோவான் 3:9
அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.

மத்தேயு 23:16
குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

மத்தேயு 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

எரேமியா 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.

ஏசாயா 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.


Tags தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும் தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும் நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்
1 Timothy 1:7 in Tamil Concordance 1 Timothy 1:7 in Tamil Interlinear 1 Timothy 1:7 in Tamil Image