சங்கீதம் 25

fullscreen1 கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

fullscreen2 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.

fullscreen3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக.

fullscreen4 கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

fullscreen5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.

fullscreen6 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.

fullscreen7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

fullscreen8 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

fullscreen9 சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

fullscreen10 கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.

fullscreen11 கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.

fullscreen12 கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

fullscreen13 அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.

fullscreen14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

fullscreen15 என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

fullscreen16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.

fullscreen17 என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.

fullscreen18 என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

fullscreen19 என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.

fullscreen20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.

fullscreen21 உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

fullscreen22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.

Tamil Indian Revised Version
செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

Tamil Easy Reading Version
தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார். அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”.

Thiru Viviliam
⁽ஆனால், உங்களுக்கு␢ நயமான கோதுமையை␢ உணவாகக் கொடுப்பேன்;␢ உங்களுக்கு மலைத் தேனால்␢ நிறைவளிப்பேன்.⁾

சங்கீதம் 81:15சங்கீதம் 81

King James Version (KJV)
He should have fed them also with the finest of the wheat: and with honey out of the rock should I have satisfied thee.

American Standard Version (ASV)
He would feed them also with the finest of the wheat; And with honey out of the rock would I satisfy thee. Psalm 82 A Psalm of Asaph.

Bible in Basic English (BBE)
I would give them the best grain for food; you would be full of honey from the rock.

Darby English Bible (DBY)
And he would have fed them with the finest of wheat; yea, with honey out of the rock would I have satisfied thee.

Webster’s Bible (WBT)
The haters of the LORD should have submitted themselves to him: and their time should have endured for ever.

World English Bible (WEB)
But he would have also fed them with the finest of the wheat. I will satisfy you with honey out of the rock.”

Young’s Literal Translation (YLT)
He causeth him to eat of the fat of wheat, And `with’ honey from a rock I satisfy thee!

சங்கீதம் Psalm 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
He should have fed them also with the finest of the wheat: and with honey out of the rock should I have satisfied thee.

He
should
have
fed
וַֽ֭יַּאֲכִילֵהוּwayyaʾăkîlēhûVA-ya-uh-hee-lay-hoo
finest
the
with
also
them
מֵחֵ֣לֶבmēḥēlebmay-HAY-lev
of
the
wheat:
חִטָּ֑הḥiṭṭâhee-TA
honey
with
and
וּ֝מִצּ֗וּרûmiṣṣûrOO-MEE-tsoor
out
of
the
rock
דְּבַ֣שׁdĕbašdeh-VAHSH
satisfied
have
I
should
אַשְׂבִּיעֶֽךָ׃ʾaśbîʿekāas-bee-EH-ha