1 “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;

2 அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;

3 என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.⒫

4 தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.

5 நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.

6 யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்; இவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள்.

7 நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்; நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன்.

8 உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்; யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்; இதைக் கூறுவது ஆண்டவரே.

9 ⁽வேற்றினத்தாரிடையே␢ இதைப் பறைசாற்றுங்கள்;␢ போருக்காக நாள் குறித்து,␢ போர் வீரர்களைக்␢ கிளர்ந்தெழச் செய்யுங்கள்;␢ படை வீரர்கள் அனைவரும்␢ திரண்டு வந்து,␢ போருக்குக் கிளம்பட்டும்.⁾

10 ⁽உங்கள் கலப்பைக் கொழுவைப்␢ போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்;␢ கதிரறுக்கும் அரிவாள்களை␢ ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்;␢ வலுவற்றவனும்␢ ‘நானொரு போர்வீரன்’ என்று␢ சொல்லிக் கொள்ளட்டும்.⁾

11 ⁽சுற்றுப் புறங்களிலுள்ள␢ வேற்று நாட்டவர்களே,␢ நீங்கள் அனைவரும்␢ விரைந்து வாருங்கள்;␢ வந்து அவ்விடத்தில்␢ ஒன்றாய்க் கூடுங்கள்;␢ ஆண்டவரே, உம் போர் வீரர்களை␢ அனுப்பியருளும்.⁾

12 ⁽வேற்றினத்தார் அனைவரும்␢ கிளர்ந்தெழட்டும்;␢ கிளர்ந்தெழுந்து␢ யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு␢ வந்து சேரட்டும்;␢ ஏனெனில் சுற்றுப்புறத்து␢ வேற்றினத்தார் அனைவர்க்கும்␢ தீர்ப்பு வழங்க␢ நான் அங்கே அமர்ந்திருப்பேன்.⁾

13 ⁽அரிவாளை எடுத்து அறுங்கள்,␢ பயிர் முற்றிவிட்டது;␢ திராட்சைப் பழங்களை␢ மிதித்துப் பிழியுங்கள்.␢ ஏனெனில் ஆலை நிரம்பித்␢ தொட்டிகள் பொங்கி வழிகின்றன;␢ அவர்கள் செய்த கொடுமை␢ மிகப் பெரிது.⁾

14 ⁽திரள் திரளாய் மக்கட் கூட்டம்␢ தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்␢ திரண்டிருக்கிறது.␢ ஏனெனில், ஆண்டவரின் நாள்␢ அப்பள்ளத்தாக்கை␢ நெருங்கி வந்துவிட்டது.⁾

15 ⁽கதிரவனும் நிலவும்␢ இருளடைகின்றன;␢ விண்மீன்கள்␢ ஒளியை இழக்கின்றன.⁾

16 ⁽சீயோனிலிருந்து ஆண்டவர்␢ கர்ச்சனை செய்கின்றார்;␢ எருசலேமிலிருந்து அவர்␢ முழங்குகின்றார்;␢ விண்ணும் மண்ணும் அதிர்கின்றன;␢ ஆயினும் ஆண்டவரே␢ தம் மக்களுக்குப் புகலிடம்;␢ இஸ்ரயேலருக்கு அரணும் அவரே.⁾

17 ⁽நானே உங்கள் கடவுளாகிய␢ ஆண்டவர் என்றும்,␢ நான் என் திருமலையாகிய␢ சீயோனில் குடியிருக்கிறேன் என்றும்␢ அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்;␢ எருசலேம் தூயதாய் இருக்கும்;␢ அன்னியர் இனிமேல்␢ அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.⁾

18 ⁽“அந்நாளில் மலைகள்␢ இனிய, புது இரசத்தைப் பொழியும்;␢ குன்றுகளிலிருந்து␢ பால் வழிந்தோடும்␢ ; யூதாவின் நீரோடைகளிலெல்லாம்␢ தண்ணீர் நிரம்பி வழியும்;␢ ஆண்டவரின் இல்லத்திலிருந்து␢ நீரூற்று ஒன்று கிளம்பும்;␢ அது சித்திமிலுள்ள␢ ஓடைகளில் பாய்ந்தோடும்.⁾

19 ⁽எகிப்து பாழ்நிலமாகும்;␢ ஏதோம் பாழடைந்து␢ பாலைநிலம் ஆகும்;␢ ஏனெனில், அவர்கள்␢ யூதாவின் மக்களைக்␢ கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்;␢ அவர்களின் நாட்டிலேயே␢ குற்றமற்ற இரத்தத்தைச்␢ சிந்தினார்கள்.⁾

20 ⁽யூதாவோ என்றென்றும்␢ மக்கள் குடியிருக்கும்␢ இடமாயிருக்கும்;␢ எருசலேமில்␢ எல்லாத் தலைமுறைக்கும்␢ மக்கள் குடியிருப்பார்கள்.⁾

21 ⁽சிந்தப்பட்ட இரத்தத்திற்கு␢ நான் பழிவாங்கவே செய்வேன்;␢ குற்றவாளிகளைத்␢ தண்டியாமல் விடேன்;␢ ஆண்டவராகிய நான்␢ சீயோனில் குடியிருப்பேன்.⁾

யோவேல் 3 ERV IRV TRV