1 ⁽அல்லேலூயா!␢ நம்முடைய கடவுளைப்␢ புகழ்ந்து பாடுவது நல்லது;␢ அவரைப் புகழ்வது இனிமையானது;␢ அதுவே ஏற்புடையது.⁾

2 ⁽ஆண்டவர் எருசலேமை␢ மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;␢ நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக்␢ கூட்டிச் சேர்க்கின்றார்;⁾

3 ⁽உடைந்த உள்ளத்தோரைக்␢ குணப்படுத்துகின்றார்;␢ அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.⁾

4 ⁽விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,␢ அவை ஒவ்வொன்றையும்␢ பெயர் சொல்லி அழைக்கின்றார்.⁾

5 ⁽நம் தலைவர் மாண்புமிக்கவர்;␢ மிகுந்த வல்லமையுள்ளவர்;␢ அவர்தம் நுண்ணறிவு␢ அளவிடற்கு அரியது.⁾

6 ⁽ஆண்டவர் எளியோர்க்கு␢ ஆதரவளிக்கின்றார்;␢ பொல்லாரையோ␢ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.⁾

7 ⁽ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்திப் பாடுங்கள்;␢ நம் கடவுளை␢ யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.⁾

8 ⁽அவர் வானத்தை␢ மேகங்களால் மறைக்கின்றார்;␢ பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்;␢ மலைகளில்␢ புல்லை முளைக்கச் செய்கின்றார்.⁾

9 ⁽கால்நடைகளுக்கும்␢ கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்,␢ அவர் இரை கொடுக்கின்றார்.⁾

10 ⁽குதிரையின் வலிமையில்␢ அவர் மகிழ்ச்சி காண்பதில்லை;␢ வீரனின் கால்வலிமையையும்␢ அவர் விரும்புவதில்லை.⁾

11 ⁽தமக்கு அஞ்சி நடந்து␢ தம் பேரன்புக்காக␢ நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம்␢ அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.⁾

12 ⁽எருசலேமே!␢ ஆண்டவரைப் போற்றுவாயாக!␢ சீயோனே!␢ உன் கடவுளைப் புகழ்வாயாக!⁾

13 ⁽அவர் உன் வாயில்களின் தாழ்களை␢ வலுப்படுத்துகின்றார்;␢ உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு␢ ஆசி வழங்குகின்றார்.⁾

14 ⁽அவர் உன் எல்லைப்புறங்களில்␢ அமைதி நிலவச் செய்கின்றார்;␢ உயர்தரக் கோதுமை வழங்கி␢ உன்னை நிறைவடையச் செய்கின்றார்.⁾

15 ⁽அவர் தமது கட்டளையை␢ உலகினுள் அனுப்புகின்றார்;␢ அவரது வாக்கு␢ மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.⁾

16 ⁽அவர் வெண்கம்பளிபோல்␢ பனியைப் பொழிகின்றார்;␢ சாம்பலைப்போல்␢ உறைபனியைத் தூவுகின்றார்;⁾

17 ⁽பனிக்கட்டியைத்␢ துகள்துகளாக விழச் செய்கின்றார்;␢ அவர் வரவிடும் குளிரைத்␢ தாங்கக் கூடியவர் யார்?⁾

18 ⁽அவர் தம் கட்டளையால்␢ அவற்றை உருகச் செய்கின்றார்;␢ தம் காற்றை வீசச் செய்ய,␢ நீர் ஓடத் தொடங்குகின்றது.⁾

19 ⁽யாக்கோபுக்குத் தமது வாக்கையும்␢ இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்␢ நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.⁾

20 ⁽அவர் வேறெந்த இனத்துக்கும்␢ இப்படிச் செய்யவில்லை;␢ அவருடைய நீதிநெறிகள்␢ அவர்களுக்குத் தெரியாது;␢ அல்லேலூயா!⁾

சங்கீதம் 147 ERV IRV TRV