1 யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.

2 அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.

3 யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.

4 எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.

5 அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.⒫

6 ⁽ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான␢ எலிகூ பேசத் தொடங்கினான்;␢ நான் வயதில் சிறியவன்;␢ நீங்களோ பெரியவர். ஆகவே,␢ என் கருத்தை உங்களிடம் உரைக்கத்␢ தயங்கினேன்; அஞ்சினேன்.⁾

7 ⁽நான் நினைத்தேன்; ‘முதுமை பேசட்டும்;␢ வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.’⁾

8 ⁽ஆனால், உண்மையில்␢ எல்லாம் வல்லவரின் மூச்சே,␢ மனிதரில் இருக்கும் அந்த ஆவியே␢ உய்த்துணர்வை அளிக்கின்றது.⁾

9 ⁽வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை;␢ முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.⁾

10 ⁽ஆகையால் நான் சொல்கின்றேன்;␢ எனக்குச் செவி கொடுத்தருள்க!␢ நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.⁾

11 ⁽இதோ! உம் சொற்களுக்காகக்␢ காத்திருந்தேன்,␢ நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை,␢ அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.⁾

12 ⁽உங்களைக் கவனித்துக் கேட்டேன்;␢ உங்களுள் எவரும் யோபின் கூற்று␢ தவறென எண்பிக்கவில்லை.␢ அவர் சொற்களுக்கு தக்க␢ பதில் அளிக்கவுமில்லை.⁾

13 ⁽எச்சரிக்கை! ‘நாங்கள் ஞானத்தைக்␢ கண்டு கொண்டோம்;␢ இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்;␢ மனிதரால் முடியாது’ என்று சொல்லாதீர்கள்!⁾

14 ⁽என்னை நோக்கி யோபு␢ தம்மொழிகளைக் கூறவில்லை;␢ உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.⁾

15 ⁽அவர்கள் மலைத்துப் போயினர்;␢ மீண்டும் மறுமொழி உரையார்;␢ அவர்கள் ஒரு வார்த்தையும்␢ சொல்வதற்கில்லை.⁾

16 ⁽அவர்கள் பேசவில்லை;␢ நின்று கொண்டிருந்தாலும்␢ பதில் சொல்லவில்லை;␢ நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?⁾

17 ⁽நானும் எனது பதிலைக் கூறுவேன்;␢ நானும் எனது கருத்தை நவில்வேன்.⁾

18 ⁽ஏனெனில், சொல்லவேண்டியவை␢ என்னிடம் நிறையவுள்ளன;␢ என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.⁾

19 ⁽இதோ! என் நெஞ்சம்␢ அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது;␢ வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.⁾

20 ⁽நான் பேசுவேன்; என் நெஞ்சை␢ ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து␢ நான் பதில் அளிக்க வேண்டும்.⁾

21 ⁽நான் யாரிடமும்␢ ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்;␢ நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.⁾

22 ⁽ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது;␢ இல்லையேல், படைத்தவரே␢ விரைவில் என்னை அழித்திடுவார்.⁾

யோபு 32 ERV IRV TRV