ஆதியாகமம் 3:20
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
Tamil Indian Revised Version
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
Tamil Easy Reading Version
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள்.
திருவிவிலியம்
மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில், உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
King James Version (KJV)
And Adam called his wife’s name Eve; because she was the mother of all living.
American Standard Version (ASV)
And the man called his wife’s name Eve; because she was the mother of all living.
Bible in Basic English (BBE)
And the man gave his wife the name of Eve because she was the mother of all who have life.
Darby English Bible (DBY)
And Man called his wife’s name Eve; because she is the mother of all living.
Webster’s Bible (WBT)
And Adam called his wife’s name Eve, because she was the mother of all living.
World English Bible (WEB)
The man called his wife Eve, because she was the mother of all living.
Young’s Literal Translation (YLT)
And the man calleth his wife’s name Eve: for she hath been mother of all living.
ஆதியாகமம் Genesis 3:20
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
And Adam called his wife's name Eve; because she was the mother of all living.
| וַיִּקְרָ֧א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| הָֽאָדָ֛ם | hāʾādām | ha-ah-DAHM | |
| שֵׁ֥ם | šēm | shame | |
| אִשְׁתּ֖וֹ | ʾištô | eesh-TOH | |
| חַוָּ֑ה | ḥawwâ | ha-WA | |
| כִּ֛י | kî | kee | |
| הִ֥וא | hiw | heev | |
| הָֽיְתָ֖ה | hāyĕtâ | ha-yeh-TA | |
| אֵ֥ם | ʾēm | ame | |
| כָּל | kāl | kahl | |
| חָֽי׃ | ḥāy | hai |
இணை வசனம்
Acts 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
Genesis 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
Genesis 2:20
அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
Matthew 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
Matthew 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
1 Samuel 1:20
சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
Exodus 2:10
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
Genesis 35:18
மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
Genesis 29:32
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.
Genesis 16:11
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
Genesis 5:29
கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
Tags ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான் ஏனெனில் அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்
ஆதியாகமம் 3:20 Concordance ஆதியாகமம் 3:20 Interlinear ஆதியாகமம் 3:20 Image